states

தீக்கதிர் விரைவு செய்திகள்

நூபுர் சர்மாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை!

நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா அவதூறான கருத்துகளை வெளியிட்டார். இது இந்தியாவில் மட்டுமன்றி, சர்வதேச அளவில் பெரும் பிரச்ச னையாக உருவெடுத்தது. ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. நூபுர் சர்மா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் தனக்கு எதிராகப் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் தில்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் தன்னை கைது செய்யக்கூடாது எனவும் நூபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றம், நூபுர் சர்மா கோரிக்கையை ஏற்று, அவரை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அக்னிபாதைக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

ராணுவத்திற்கு நான்காண்டு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆளெடுக்கும் புதிய ராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையாக ‘அக்னிபாதை’ திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அண்மை யில் கொண்டு வந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். பேருந்துகள், ரயில்கள் எரிக்கப்பட்டன. மேலும், இத்திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல உயர் நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்திலும் பல பொதுநலன் வழக்குகள்  தொடரப்பட்டன. இந்நிலையில் அக்னிபாதைத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் 100% வாக்குப்பதிவு!

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்களன்று நாடு  முழுவதும் நடைபெற்றது. இத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 771 பேரும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,025 பேருமாக மொத்தம் 4,796 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றி ருந்தனர். இந்நிலையில், அவர்களில் 99 சதவிகிதம் பேர் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ள தாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக, சத்தீஸ்கர், கோவா,  குஜராத், இமாசல பிரதேசம், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணி்ப்பூர், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு ஆகிய 12 மாநிலங்களில் 100 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் ஆணையம் கூறியுள்ளது. பதிவான வாக்குகள் ஜூலை 21 அன்று எண்ணப்பட உள்ளன.

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: ராவத் வலியுறுத்தல்

“2.5 லட்சம் மக்கள் உள்ள பர்போடாசுக்கு 27 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் 12 கோடி  மக்கள் உள்ள மகாராஷ்டிராவிற்கு 2 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். அரசியல் அமைப்பு இங்கு எங்கு உள்ளது? எனவே, எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார். “கடந்த 2 வாரமாக 2 பேர் (ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்) கொண்ட அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் சட்டத்தின்படி செல்லாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோமியத்தை லிட்டர் 4 ரூபாய்க்கு வாங்கும் காங்கிரஸ் அரசு

‘பசு நீதி’ என்ற திட்டத்தின் மூலம் கோமியத்தை லிட்டர் 4 ரூபாய் விலைகொடுத்து அரசே  கொள்முதல் செய்யும் என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்  ளார். கோதன் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ், கால்நடை விவசாயிகள், கிராம மக்கள், மகளிர்  சுயஉதவி குழுக்கள் மற்றும் கோதன் குழுக்களுக்கு ரூபாய் 294 கோடி நிதி வழங்கப்பட்டுள்ள தாகவும் அவர் கூறிள்ளார்.

கள்ளக்குறிச்சி ஆட்சியர், எஸ்பி பணியிட மாற்றம்

சென்னை,ஜூலை 19-  சின்னசேலம் அருகே பள்ளி மாணவி  உயிரிழந்த விவகாரத்தில் பெரும் கலவர மாக மாறியது. அங்கு நடந்த வன்முறை யில் பேருந்துகள், காவல்துறையினரின் பைக்குகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் 27 பேருந்துகள் உள்பட மொத்தம் 67 வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 3,000 மாணவர்களின் டி.சி உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து தீக்கிரையானது. இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தினார். மேலும், கலவரம் தொடர்பாக விசாரிக்க  சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக ஷ்வரன் குமார் ஜவாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமாருக்கு பதிலாக பகவலன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை  உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி  வெளியிட்டிருக்கிறார்.

மணிரத்னத்திற்கு கொரோனா இல்லை

சென்னை, ஜூலை 19- இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட உலகில் முன்னணி  இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்பட மாக உருவாகியுள்ள படம் பொன்னியின்  செல்வன் செப்டம்பர் 30 ஆம்தேதி வெளி யாகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அவரது செய்தி மக்கள் தொடர்பு துறை தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும், பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா ‘நெகடிவ்’ என வந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதிமுக கொறடா கடிதம்:  அப்பாவு விளக்கம்

திருநெல்வேலி, ஜூலை 19- திருநெல்வேலியில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்  தலைவர் நியமனம் தொடர்பாக அவரி டம் கேள்வி கேட்கப்பட்டது. இதில் பதில் அளித்த அவர், “எதிர்க்கட்சி கொறடா வேலுமணி சென்னையிலுள்ள எனது உதவி யாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள் ளார். அதில் என்ன எழுதியிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர்கள் கூறுகிறீர்கள். ஆனால் நான் இன்னும் அந்த கடிதத்தை படித்துப் பார்க்கவில்லை”என்றார். கடந்த வாரம் அதிமுக ஒருங்கிணைப் பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓபிஎஸ் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதமும் பரிசீலனையில் உள்ளது. அதேபோல், கொறடா கொடுத்துள்ள கடிதத்தையும் படித்துப் பார்த்து பரிசீலனை செய்து, சட்டப்பேரவைத் தலைவர் என்ற அடிப்படையில், ஜன நாயக வழியில் சட்டப்படி விதிப்படி நியாயமாக ஒருதலைபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.