சென்னை, டிச.31- தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மையங் களான சென்னை, கோயம்புத்தூர், காஞ்சி புரம் மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட விரி வான ஆய்வில், காசநோயால் பாதிக்கப்பட்ட வர்களில் 36.6 சதவீதம் பேர் புலம்பெயர் தொழி லாளர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட சமூக நல அமைப்பான ‘ரீச்’ (Resour ce Group for Education and Advocacy for Community Health - REACH) நடத்திய இந்த ஆய்வு, புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு சுகாதார சவால்களை யும் வெளிக்கொணர்ந்துள்ளது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் STOP TB Partnership ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை இந்த முன்னோடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வயது மற்றும் பாலின பகுப்பாய்வு மொத்தம் 11,564 பேர் பரிசோதிக்கப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான நோயாளிகள் (77 சதவிகிதம்) 15-59 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்கள் என்பது கவலையளிக்கும் தகவலாக உள்ளது. பாலின அடிப்படையில் ஆராயும்போது, 66 சதவிகிதம் பேர் ஆண்கள் என்பதும், 34 சதவிகிதம் பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 22 சதவிகிதம் நோயாளிகளுக்கு மருந்து எதிர்ப்பு காசநோய் (Drug-resistant TB) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது சிகிச்சை அளிப்பதில் சிக்கல்களை மேலும் அதிகரிக்கிறது.
புலப்பெயர்வு அடையாளப்படுத்தல்
இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு விஷயம், புலம்பெயர் தொழி லாளர்களில் 62 சதவிகிதம் பேர் வேறு மாநி லங்களிலிருந்து வந்தவர்கள். குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்களே அதிகம். 22 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வேலை தேடி வந்தவர்கள். மீதமுள்ள 16 சதவிகிதம் பேர் ஆய்வு நடத்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
உடல்நல நிலை மற்றும் பழக்கவழக்கங்கள்
இந்த நோயாளிகளிடையே நடத்தப்பட்ட விரிவான உடல்நலக் கணக்கெடுப்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி யுள்ளன: - 25% பேர் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட வர்கள் - 27% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் - 25% பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான வர்கள் - 22.4% பேர் புகையிலை அல்லது புகை யில்லா புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் - 8.8% பேர் உடல் பருமன் கொண்டவர்கள் - 3.6% பேர் எச்ஐவி நோயாளிகள்
சமூக-பொருளாதார சவால்கள்
ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகளின்படி, இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றனர்:
1. பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான வேலை சூழல்
2. அடிப்படை ஆவணங்கள் இன்மை
3. சரியான நேரத்தில் நோய் கண்டறியப்படாமை
4. சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட இயலாமை
5. சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் இன்மை
‘ரீச்’ அமைப்பின் பரிந்துரைகள்
1. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இலவச மற்றும் சிறப்பு மருத்துவ சேவைகளை அதிகரித்தல்
2. தொழிலாளர் நல திட்டங்களின் கீழ் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்
3. ஆவணப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு முறைகளை எளிமைப்படுத்துதல்
4. காசநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை தீவிரப்படுத்துதல்
5. மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கி ணைந்த சுகாதார சேவைகளை மேம்படுத்துதல்
“புலம்பெயர் தொழிலாளர்களின் நலனில் கவனம் செலுத்தாமல், காசநோய் ஒழிப்பு என்பது சாத்தியமில்லை” என
‘ரீச்’ அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்
ளார். மேலும், “இந்த ஆய்வின் முடிவு
கள் அடிப்படையில், புலம்பெயர் தொழி
லாளர்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தி
யுள்ளார்.