சண்டிகர், செப். 16 - ஹரியானா மாநிலத்தின் பல்வால் மாவட்ட பகுதியில் உள்ளது சில்லி கிராமம். இந்த கிராம பகுதியில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 6 குழந்தைகள் உயிரிழந்துள் ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அங்கு சிறப்பு முகாம் நடத்தி ஆய்வு செய்தது. சான்று எதுவும் கிடைக்காத நிலையில், தண் ணீர் மாசுபடுதலால் தொற்று உண்டாகி மர்ம காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என மாநில அரசு தெரிவித்துள் ளது. இறந்த குழந்தைகளின் உடற்கூராய்வில் கொரோனா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பாதிக்கப்பட்ட தற்கான ஆதாரங்கள் இல்லை.