states

அனைவருக்கும் சுகாதாரம் : மோடி ஆட்சியின் வாய்ஜாலம்! - சுபீர் ராய்

2047 ஆம் ஆண்டில் 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக இந்தியா மாறும்.  சீனா, ஜெர்மனி, ஜப்பானை முந்திய பிறகு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஆக வளரும் என மோடி அரசு உடுக்கை அடிக்கிறது. அப்படி யென்றால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் தற்போது கூறப்படும் ஏழு சதவீத வளர்ச்சி போதாது. பத்து சதவீத வளர்ச்சி தேவை.பிரதமர் பேசுவது தேர்தலுக்கு முந்தைய ஒரு விளம்பரச் சொல்லாடலே! இத்தகைய நிலையான வளர்ச்சி எங்கேயிருந்து வரும் என அவர் கூறத் தயாரா?

112ஆவது இடத்தில்...

லண்டனைச் சேர்ந்த லெகாடம் (Legatum) என்ற நிறுவனம் உலக நாடு களை அதன் சுகாதார அமைப்புகளின் செயல் திறமையை கொண்டு தரப் படுத்தி அறிக்கை வெளியிடுகிறது. சிங்கப்பூர்  முதலிடம். ஜப்பான், தென் கொரியா, தைவான், சீனா பிறகு இடம் பெறுகின்றன. சின்னஞ்சிறு இலங்கை 47ஆவது இடத்திலும் உலக வல்லரசான அமெரிக்கா 69 ஆவது  இடத்திலும் நிற்கிறது. மோடியின் இந்தியா 100 க்குள்  வரக்கூட தகுதி இல்லாமல் 112ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதிர்ஷ்ட வசமாக உலகின் மிக மோசமான சுகாதார அமைப்புகளை கொண்ட 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா இல்லை என்பதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி.

பிரிக்ஸ் நாடுகள் வரிசையிலும் பின் தங்கும் இந்தியா!

இந்தியாவின் சுகாதாரச் செலவு 2021 22-இல் மொத்த ஜிடிபி (GDP) யில் 1.6 சதவீதம். 2022-23 ஆம் ஆண்டில் அது 2.1 சதவீதமாக உயர்ந்தது உலக வங்கியின் விவரப்படி இது பிரிக்ஸ் நாடுகளில் மிகவும் குறைவான அளவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக இருந்த இந்தியாவின் செலவு இலங்கை 4.1 சதவீதம், சீனா 5.3 சதவீதம், பிரேசில் 9.6 சதவீதம் மற்றும் ஜப்பான் 10.7சதவீதத்தை  விடவும் மிகவும் குறைவு.2.5சதவீதம் செலவு செய்யும் வங்கதேசத்தை விட நாம் முன்னிலையில் இருப்பதற்காக மோடிக்கு மீண்டும் நன்றி சொல்வோம். இந்த ஆண்டு சுகாதாரச் செலவுக ளுக்காக கடந்த ஆண்டை விட  கூடுதலாக 14 சதவீதம் அதாவது 90 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது என இடைக்கால பட்ஜெட் தெரிவிக்கிறது. நான்கு சதவீத பணவீக்கத்திற்கு பிறகு நிகர உயர்வு வெறும் 10 சதவீதம் ஆகவே இருக்கும். சுகாதாரப் பாதுகாப்பிற்கு இது ஒன்றும் பெரிய அளவிற்கு உதவாது. மருந்துத் துறையின் மேம்பாட்டுச் செலவுக்கு 1,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என நாம் பெருமூச்சு விடும் பொழுது உயர்ந்து  வரும் பண வீக்கம் அதை பாதியில் நிறுத்துகிறது.

வெகு தொலைவு...

ஏழைகள் செய்யக்கூடிய சுகாதாரச் செலவு 2013இல் 69 சதவீதமாக இருந்தது. 2020இல்  51சதவீதமாக  குறைந்துள்ளது. வாங்கும் சக்தி வீழ்ச்சி ஒரு காரணமா என்ற விவாதமும் இதில் மறைந்துள்ளது. வளர்ந்து வரும் தலைமுறையினர் ஆரோக்கியமாக வளரும் பொழுது தான் தொழிலாளர்களின் உழைப்பின் மதிப்பு பொருளாதாரத்தில் உயரும்.மோடி ஆட்சி உள்ள வரை அந்தச் சூழல் இன்னும் அதற்கு வெகு தொலைவு என்பதே உண்மை.

ஆயுஷ் மான் திட்டமும் உண்மை நிலையும் !

ஆயுஷ்மான் பாரத் ஜன ஆரோக்யா யோஜனா என்ற திட்டத்தை பற்றி நம்முடைய பிரதமர் அடிக்கடி பேசுகிறார். மோடியின் உத்தரவாதம் என்று உறுதி அளிக்கிறார். காற்றின் ஊடே எல்லா இடங்களிலும் இது கேட்கிறது. மக்கள் தொகையில் பாதி பேருக்கு இலவச மருத்துவ காப்பீட்டை இது வழங்குகிறதாம். ரூபாய் 5 லட்சம் வரை இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சிகிச்சையை அளிக்கிறதாம். பட்டியலி டப்பட்ட பொது மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் இந்த சேவை கிடைக்குமாம். 1.5 லட்சம் ஆரம்ப சுகாதார மையங்களை தரம் உயர்த்துவதன் மூலம் இந்த சேவை எல்லோருக்கும் விரிவாக்கப்படுமாம்.

வாயால் சுடும் வடை

ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவ அலுவலர்,ஒரு செவிலியர், ஒரு மருந்தா ளுநர் மற்றும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருப்பார்களாம்.( அப்படி என்றால் 7.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு  உண்டா?) 90 சதவீதம் பேருக்கு முழு நோய் தடுப்பு  மருந்துகள் கிடைக்க உதவும் தடுப்பூசி மேலாண்மை தளமான யூ வின் (U-Win) ஐ மோடி அரசு தொடங்குமாம், கடந்த 10  வருடம் உங்கள் ஆட்சிதானே,ஏன் இப்பொழுதுதான் தொடங்குகிறீர்கள் மோடி, அவர்களே? இதற்காக மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுமாம். பயிற்சி மருத்து வர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் காத்திருப்பார்களாம். நோயுற்ற ஒருவரை இலவசமாக அழைத்துச் செல்ல வாகனம் தயார். பணம் இல்லா (Cashless) வசதி யின் மூலம் குடிமக்கள் சிறப்பாக அங்கே  சிகிச்சை பெற முடியும் என்று “உறுதிப் படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ ஆதா ரங்களை” மோடி அரசுசொல்லிக் கொண்டே போகின்றது. புள்ளி விவரங்களையும்  அள்ளி விடுகின்றது.

உண்மை நிலை என்ன?

ஏராளமான குளறுபடிகள் இந்தத் திட்டத்தில் இருப்பதாக களத்தில் இருந்து வரும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன தனியார் காப்பீடு செய்தவர்களுக்காக இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத் துறை பொது  இன்சூரன்ஸ் நிறுவனம் (GIC) ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி பாலிசிதாரர்கள் எந்த மருத்துவமனையிலும் பணமில்லா திட்டம் மூலம் இலவச சிகிச்சை பெறலாம். மருத்துவமனைகளுக்கான காப்பீட்டாளர்களுக்கான வலைப்பின்ன லில்  ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும் அரசு மருத்துவமனைக்கு பணத்தை செலுத்தும்.இது பாலிசிதாரர்களுக்கு பணமில்லா சிகிச்சை பெறுவதை சாத்தியமாக்குகிறது. ஆனால் இது எழுத்து வடிவத்தில் மட்டுமே உள்ளது. இன்சூரன்ஸ் நிறுவ னங்களிடமிருந்து மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறுவதில் மிகுந்த காலதாமதம் ஆகிறது. எனவே,இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ் உள்ள இந்திய மருத்துவ மனை வாரியம் சேவை வழங்கப்படுபவர்க ளை காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பு நிர்வாகிகளுடன் பண மில்லா சிகிச்சை ஒப்பந்தங்களை போட வேண்டாம் என முட்டுக்கட்டை போட்டுள் ளது.

மோடியின் ஆட்சியில் நடப்பது இதுதான்!

பொது மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் காப்பீடு என்பதன் வழியாக அதிக தொகையை நோயாளிகளிடமிருந்து மூன்றாம் நபர் நிர்வாகி( TPA)மூலம் வசூ லிப்பதற்கு பேரம் பேசுகிறது. மொத்தத் தொகையையும் அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்கிறது.மருத்துவ மனையில், தங்கள் கையில் இருந்து செலவு செய்யும் தொகை நோயாளிகளுக்கு திரும்பக் கிடைப்பதில்லை. அனைவருக்கும் சுகாதாரம் என்று மோடி அரசு கூறுவதெல்லாம் மக்களை ஏமாற்றும் வித்தையே. வளர்ந்த நாடு என்பது வலுவான சுகாதார அமைப்பை கொண்டிருக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை அனைவ ருக்கும் சுகாதாரம் என்பது ஒரு தொலை தூரக் கனவாகவே இருக்கும்! சுதந்திரத்தின் நூற்றாண்டை நாடு நிறைவு செய்யும் பொழுது 2047-இல் வளர்ந்த இந்தியாவாக மாறும் என மோடி அரசு கூறுவது மற்ற துறைகளைப் போலவே சுகாதாரத் துறையிலும் தங்கள் தோல்வியை மறைக்கும்  வார்த்தைகள் தான்.

கட்டுரையாளர் :மூத்த பொருளாதார ஆய்வாளர், 
நன்றி : தி ட்ரிப்யூன் 26/2/24 
தமிழில்: கடலூர் சுகுமாரன்