states

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியானதல்ல!

சென்னை,அக்.20- தமிழகத்தில் தீபாவளி நேரத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை  மையங் களை அதிகரிக்கவும், கடைகளில் அதிக இலக்கு வைத்து விற்பனை செய்யும் தமிழக  அரசின் செயல்பாடு சரியானதல்ல என்று  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செய லாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபா வளி பண்டிகை வருவதை ஒட்டி தமிழகம் முழு வதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வும், கடைகளின் இலக்கை அதிகரித்து விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டு இருப்ப தாக தகவல்கள் வருகிறது. இது கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும்  ஏழை எளிய குடும்பங்களின் வரு மானத்தை டாஸ்மாக் கடைகள் மூலம் ஒட்டச் சுரண்டும் ஏற்பாடாகும்.  பண்டிகை காலங்களில் ஏழை எளிய சாதாரண குடும்பங்கள் மகிழ்ச்சியோடு இருப் பதற்கான சூழலை முற்றிலும் சீர்குலைக்கும் ஏற்பாடாக டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு அமையும். ஏற்கனவே பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு டாஸ்மாக்  கடை களில் விற்பனையை குறைப்பதற்கான நட வடிக்கைகளை எடுத்திட வேண்டுமே தவிர விற்பனையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கை களிலும் ஈடுபடுவது சரியானது அல்ல.  மேலும்  அரசு நிர்ணயித்த நேரத்திற்கு அதிகமாக சட்ட விரோதமாக விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  பண்டிகை காலங்களில் மது பானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தமிழக முழுவதும் இயங்கும் மன்றங்களில் மதுவிற்பனை நேரத்தை குறைப்பதுடன் மனமகிழ் மன்றங்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் நிர்ணயித்திட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார் களில் வரும் நபர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அனுமதிக்க கூடாது. திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக் கையில் அளித்துள்ள வாக்குறுதிப்படி படிப் படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை யை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.