states

உளுந்து, பாசிப் பருப்பு விலை உயர்வு; பாமாயில் விலை குறைவு

விருதுநகர் சந்தையில் உளுந்  தம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலை கடந்த வாரத்தை விட சற்று உயர்ந்துள்ளது. அதேவேளை பாமா யில் விலை சற்று குறைந்துள்ளது. பாமாயில் ஆர்.பி.டியின் விலை யானது 15 கிலோ கடந்த வாரம் ரூ. 1360 என இருந்தது. இந்த வாரம்  டின் ஒன்றுக்கு ரூ.35 குறைந்துள்ளது. எனவே, பாமாயில் விலை ரூ.1325 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு துவரம் பருப்பு, உளுந்  தம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகிய வற்றின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இந்த  வாரம் அதன் விலையானது அதே நிலையில் உள்ளது. இதில் உருட்டு உளுந்தம் பருப்பு  நாடு வகையானது கடந்த வாரம் 100 கிலோ ரூ.13 ஆயிரத்திற்கு விற்  பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 மட்டும் குறைந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.12,800 என்ற விலைக்கு விற்பனையாகிறது. ஆனால், உளுந்து நாடு வகையானது குவிண்டால் ஒன்று கடந்த வாரம் ரூ.9400 என்ற விலைக்கு  விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்  டால் ஒன்றுக்கு மேலும் ரூ.100 உயர்ந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.9500 என விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,800 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 200 வரை உயர்ந்துள்ளது. இதன் கார ணமாக மூட்டை ஒன்று ரூ.11 ஆயி ரத்திற்கு விற்பனை செய்யப்படு கிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ  ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளதால், குவிண்டால்  ஒன்று ரூ.6200 வரை விற்பனையாகி றது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.