states

காவலர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு

சென்னை, ஆக.5- தமிழ்நாடு காவலர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை உயர்வு செயல்படுத்தும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கான உத்த ரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். காவலர்கள் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது 100 மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 25 ஆயிரம்  வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப் படுகிறது. இந்த எண்ணிக்கை 200 மாணவர்களாகவும், தொகையை ரூ. 30 ஆயிரமாகவும் உயர்த்த சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல் படுத்தும் வகையில், அதற்கான  நிதி ரூ.2.40 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 37 காவல் மாவட்டங்கள், 9 காவல்  ஆணையரகங்கள் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்கு கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டமும்  ஆண்டுதோறும் செயல் படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கல்விப்  பரிசுத் தொகையும் உயர்த்தப்படு கிறது. இதற்கான நிதி ரூ. 28.29 லட்சத் தில் இருந்து ரூ. 56.58 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.