“அரசியல் ரீதியாக நாங்கள் விமர்சனங்களை முன்வைக்கிறோம். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. கடந்த 9 ஆண்டு களில் செய்த சாதனைகள் என்று எதையும் சொல்ல முடியாத அவர்கள், பொய்யையும் புரட்டுகளையும் மட்டுமே கூறி வருகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணி பிரிந்தாலும், சேர்ந்தாலும் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் சேர்த்து 40 தொகுதிகளையும் ‘இந்தியா’ கூட்டணிதான் வெல்லப் போகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து வழிநடத்துகிறார். திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதை ஒரு பொருட்டாகவே கருத முடியாது. உண்மையில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும்தான் போட்டி. பாஜகவின் நடவடிக்கைகளைப் பார்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பலரும் வெளியே வரத் தொடங்கியுள்ளனர். கடைசியில் மோடியுடன் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அதானிதான் கூட்டணியில் இருப்பார்கள். வரப்போகிற 5 மாநிலங்களுக்கான தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால், எரிவாயு உருளையை ஆயிரம் ரூபாய்கூட குறைத்துவிடுவார்கள். இது அவர்களின் தேர்தல் நாடகம்” கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி புதுக்கோட்டையில் அளித்த நேர்காணல் முன்னதாக ராகுல்காந்தியை ராவணனைப் போல சித்தரித்து சமூக ஊடகங்களில் படங்களை வெளியிட்டு வரும் பாஜக தலைவர்களைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.