states

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

உலகளாவிய மாநாடுகளில், 1990ஆம் ஆண்டு தொடங்கி, வளிமண்டலத்தில் கழிவுவாயு செறிவு அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதால் திரும்பமுடியாத மற்றும் பயங்கரமான கொடிய காலநிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயுக் கசிவு உமிழ்வை 5% குறைக்க வேண்டுமெனக் கோரப்பட்டபோதிலும், அவர்கள் தங்களது கழிவு உமிழ்வை 10% அதிகரித்துள்ளனர். அமெரிக்கா இதைச் செய்ய மறுத்து, தங்களது உமிழ்வை 17% அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ‘ஒவ்வொரு மனிதனுக்கும் சமச்சீரான கார்பன் வெளியீடு’ என்ற அடிப்படையில் சமத்துவத்தை ஏற்க மறுக் கிறது. அது உலகின் எதிர்காலத்திற்கு ஆபத்து.