77 மாத அகவிலைப்படி உயர்வை உடனே நிலுவையுடன் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் 3ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் வியாழனன்று (ஏப். 28) நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் கே.கர்சன், பொருளாளர் ஏ.வரதராஜன் துணைப் பொதுச்செயலாளர்கள் பி.செல்வராஜன், ஆர்.தேவராஜ், கே.வீரராகவன், மாநில நிர்வாகிகள் ஜி.ராமச்சந்திரன், ஏ.ரைமண்ட், எம்.சந்திரன், சேதுராமன், சண்முகம், முத்துக்குமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.