states

“உச்சநீதிமன்ற நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வேன்”:அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை, செப்.23- சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டா லின், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி”எனக் கூறியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பேசியதை திரித்து பாஜகவின்  ஐ.டி. பிரிவுத் தலைவர் அமித் மால்வியா தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து, மத வெறி கும்பல்கள் நாடு முழுவதும்  பிரச்சனையை உருவாக்கி குளிர்காய முயன்றன. தமிழ்நாட்டில் திமுக சார்பில்  அமித் மால்வியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே போல், ஜெகநாதன் என்பவர் அமைச்சர் உதயநிதியின் பேச்சு குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசார ணையை தொடங்கிய போது நீதிபதிகள் சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பாக மனுதாரர் உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும், உச்சநீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்று தெரிவித்தார். ஆனால் மனுதாரரின் தொடர்  வாதத்தின் காரணமாக, வழக்கை  ஆராய்ந்த நீதிபதிகள், முதற்  கட்டமாக நோட்டீஸ் மட்டும் அனுப்புகிறேன், நீங்கள் இந்தியா வில் உள்ள எந்த உயர்நீதி மன்றத்தை வேண்டுமானாலும் நாடலாம் என்று அறிவுறுத்தினார். மேலும், இந்த மனு தொடர் பாக அமைச்சர் உதயநிதி பதில ளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது குறித்து செய்தியாளர் கள் கேள்வி எழுப்பினர். அதற்கு  பதில் அளித்த அவர், “உச்சநீதி மன்ற நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று தெரிவித்தார்.