பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து துரத்த காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் “இந்தியா” என்ற பெயரில் புதிய கூட்டணி யை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணி யால் ஆளும் பாஜக மிரண்டு, மக்களை திசைதிருப்ப பல்வேறு செயல்களில் ஈடு பட்டு வரும் நிலையில், பாஜகவின் “பி டீம்” என்ற பிம்பத்துடன் செயல்பட்டு வரும் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு “இந்தியா” கூட்டணி இதுவரை அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி, அக்கட்சி யின் தலைவர் அசாதுதீன் ஓவைசி 3-வது அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியா” கூட்டணி யில் சேர அழைக்கப்படாதது குறித்து எனக்கு கவலை இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தெலுங் கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் மகாராஷ்டிரா வைச் சேர்ந்த பல கட்சிகளும் “இந்தியா” கூட்டணியில் உறுப்பி னர்களாக இல்லை. தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவை முன்னோக்கிச் சென்று மூன்றாவது அணியை உரு வாக்கி, இதில் பல கட்சிகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். கே.சந்திரசேகர ராவ் தலைமை ஏற்றால் அரசியல் வெற்றிடம் நிரப்பப்படும்” எனக் கூறியுள்ளார்.