states

அமித்ஷாவிற்கு தெரிந்த ஒரே மொழி இந்தி தான்

மோடி ஆட்சிக்கு வந்ததி லிருந்து நாட்டில் இந்தி  மொழியை கட்டாயமாக் கும் முனைப்பில்  பல்வேறு அழுத்தங்களை  ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களுக்கு கொடுத்து வருகிறது. அதன்படி, இந்தி தினத்தை முன்னிட்டு ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா வியாழ னன்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக இருந்தாலும், உலகின் மிகப்பெரிய இந்த ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. நாட்டின் அனைத்து மொழிகளையும் வலுப்படுத்தி னால் மட்டுமே வலிமையான நாடு உரு வாகும். இந்தி ஒருபோதும் மற்ற இந்திய மொழிகளுடன் போட்டி போடவில்லை. விடுதலை போராட்டத்தின் கடினமான காலங்களில் நாட்டை ஒருங்கிணைக்க இந்தி மொழி மிகப்பெரிய பங்காற்றி உள் ளது. பல மொழிகள் மற்றும் பேச்சுவழக்கு களைக் கொண்ட இந்தியாவில் ஒற்று மை உணர்வைத் தூண்டியது” என்று கூறியிருந்தார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகை யில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,”நீங்கள் இந்தி பேசு கிறீர்கள். ஏனென்றால் அது உங்களுக்குத் தெரிந்த ஒரே மொழி. உங்களுக்குத் தெரிந்த ஒரே மொழி என்பதால் எங்களை யும் இந்தி பேசச் சொல்கிறீர்கள்.  முத லில் “இந்தி திணிப்பை நிறுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.