states

img

ஹீலியம் பலூன் வெடிப்பு : 33 பள்ளி குழந்தைகள் காயம்

சத்தீஸ்கர் மாநிலம் சற்குஜா மாவட்டத்தின் அம்பிகாபூர் நகரில் உள்ளது விவேகானந்தா வித்யா நிகேதன் பள்ளி. வியாழனன்று மதியம் பள்ளி விளையாட்டு மைதா னத்தில், நிகழ்ச்சி ஒன்றிற்காக ராட்சத பலூன்களில் ஹீலியம்வாயு நிரப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பலூன் வெடித்துச் சிதறியதில், ஹீலியம் சிலிண்டர்கள் மூலம் காற்று நிரப்பிக்கொண்டு இருந்த 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் மைதானத்தில் பலூன்களில் ஹீலியம் நிரப்பும் பணியை ஆவலு டன் பார்த்துக் கொண்டிருந்த 33 மாண வர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக காயம் அடைந்த அனை வரும் சிகிச்சைக்காக மருத்துவமனை களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.