சென்னை, ஆக,13- நீட் தேர்வில் இருந்து தமிழகத் திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று கொக்கரிக்கும் ஆளுநர் ரவி தமி இருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ‘எண்ணித் துணிக’ என்னும் தலைப்பில் ஆளுநர் ரவி நடத்தி வரும் கலந்துரையாடலில் ‘நீட்’ தேர்வில் முதல் 100 இடங்களைப் பெற்ற தமிழக மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை அம்மாசி யப்பன் ராமசாமி என்பவர், ‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர் களின் பெற்றோர் அதிகம் செல வளிக்க வேண்டியுள்ளது. எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதாவில் நான் கண்டிப்பாக கையெழுத்து இட மாட்டேன்” என்று ஆணவத்துடன் கொக்கரித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், சட்டமன்றத்தில் நிறை வேற்றபட்ட மசோதவை கையெ ழுத்து இட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்புவதுதான் அரசியல் சட்ட அமைப்பின் படி ஆளுநருக்கு உள்ள அதிகாரம். அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, தான் தோன்றித் தனமாக ஆளுநர் ஆர். என். ரவி பேசிவருவது கண்டனத் துக்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளியேற்றப் பட வேண்டும்.இவ்வாறு வைகோ தெரி வித்துள்ளார்.