states

அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாம்!

சென்னை, நவ. 25 - “இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.  எல்லாம் அறிந்த ஏகாம்பரம் போல தன்னைக் காட்டிக் கொள்ளும் வகையில், எதையாவது அரைகுறை யாக படித்துவிட்டு உளறும் ஆளுநர் ரவி, இப்போதும் தன்னை ஒரு சட்ட வல்லுநர் போல கருதிக் கொண்டு, அர சியலமைப்பு சட்டமே சரியாக இல்லை என்று பேசியுள்ளார். சுதந்திர இந்தியாவின் அரசிய லமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்ட நாளை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசமைப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே அரசியலமைப்புச் சட்டம்  உருவாக்கப்பட்டது.

இந்திய அரசி யலமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா? என்பதை விவாதிக்க வேண்டிய நேரம் இது; நீதிமன்றங் களில் மட்டும் இல்லாமல் சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அரச மைப்புச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், “சாதாரண மக்களுக்கு நீதி விலை உயர்ந்ததாக உள்ளது” என்று போலிக் கண்ணீர் வடித்துள்ள அவர், “சுதந்திரத்திற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடினோம்; சுதந்திரத்திற்குப் பின்னர் அவரவர் தாய் நிலம், அவரவர் தாய்மொழி எனப் பிரிந்துவிட்டோம். மாநிலங்கள் என்ற அளவில் நாம் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக் கள் பரவிக்கிடக்கின்றன” என்றும் ‘வேதனை’பட்டுள்ளார். இந்தியாவில் சமஸ்கிருதம், இந்தி மட்டுமே இருக்க வேண்டும்; தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளை ஒழித்துக் கட்ட வேண்டும். மொழி அடிப்படையில் மாநிலங்கள் இருக்கக் கூடாது என்பது ஆர்எஸ்எஸ்-ஸின்  விஷத் திட்டம். அதையே, ‘மொழியால் பிரிந்து கிடக்கிறோம்’ என்று வேறு வார்த்தைகளில் ஆளுநர் ரவி வெளியில் கக்கியுள்ளார்.