states

அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல; வாகன யாத்திரை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை, ஆக. 23- பாஜக அண்ணாமலை பாத யாத்திரை அல்ல; வாகன யாத்திரை தான் செல்கிறார் என காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார். ஆளுநரை மக்கள் விரை வில் ஊரை விட்டு அனுப்பும் சூழல் வரும். சட்டசபையில் என்ன கோப்பு கொடுக்கிறோமோ அதில் கையெ ழுத்து மட்டும் போட வேண்டியது தான் ஆளுநரின் வேலை. டிஎன்பிஎஸ்சிக்கு தலைவராக சைலேந்திர பாபுவின் நியமனத்திற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். ஆளுநர் ரவி மீது தமிழ்நாட்டு மக்க ளுக்கு கோபம் இருக்கிறது. சைலேந்திர பாபு நல்ல அதிகாரியாக இருந்தவர். அண்ணாமலையை பொறுத்தவரை வாயை திறந்தாலே பொய் தான் சொல் கிறார்.

அவர் பாதயாத்திரை போக வில்லை, வாகன யாத்திரை தான் செல்கிறார். இந்த பாதயாத்திரை முடிந்த பின்னர் அவர் காணாமல் போய் விடுவார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது ஏற்கெனவே 7 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந் தது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்து கிறது. காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவார் என எதிர் பார்க்கிறோம். மழை பொழிவு குறை வாக உள்ளதால், தற்போது 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு காங்கிரஸ் கொண்டு வந்த போது, மாநிலங்கள் வேண்டும் என்றால்  அமல்படுத்தி கொள்ளலாம் இல்லை என்றால் நிறுத்தி விடலாம் என்று கூறியது. ஆனால் பாஜக அரசு நீட் தேர்வை கட்டாயமாக அமல் படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப் பாடி கே.பழனிச்சாமி பேசி இருக்க வேண்டும். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு என்பது 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். ஆனால் 50 ஆயிரம் பேர் தான் கலந்து கொண்ட னர். அங்கு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே  நடந்துள்ளன. 5 மணி நேரம் கூட நடை பெறவில்லை. இது ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.