states

சமூக வலைத்தள குழுக்களில் இருந்து வெளியேற வேண்டும்!

மணிப்பூரில் இன அடிப்படை யில் அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் வேறுபாடு  ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதிகாரிகள் யாரும் சமூக வலைத்தள குழுக்களில் இருக்கக் கூடாது என்று மணிப்பூர் மாநில பாஜக அரசு உத்தரவிட்டு உள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பான  வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கில் மணிப்பூ ரில் நிலவும் தற்போதைய நிலவரம் தொடர்  பான நிலையறிக்கையை அம்மாநில பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்தது.  கடந்த ஆகஸ்ட் 1 அன்று தாக்கல்  செய்த அந்த நிலையறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் தற்போது வெளி யாகியுள்ளது.  அதாவது, முகநூல் மற்றும் வாட்ஸ்  அப் உள்ளிட்ட குழுக்களில் பிரிவினை வாதம், தேசவிரோதம் மற்றும் வகுப்பு வாதத்தை அதிகரிக்கும் செயல்களில் ஈடு படுவதாகவும், இதனால், அரசு அதிகாரி கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த வர்கள் அனைத்து சமூக வலைத்தள குழுக்களில் இருந்தும் வெளியேற வேண்  டும் என்றும் உள்துறை ஆணையர் டி. ரஞ்சித் சிங் பெயரில் அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பி டப்பட்டுள்ளது.