states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபுவின் நீதிமன்ற காவலை மேலும் 11 நாட்கள் நீட்டித்து விஜயவாடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

10 கி.மீ.க்கு மேல் பயணம் செய்து மாணவர்கள் தேர்வெழுதும் அரசுப் பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்  பட வேண்டும் என சிஇஓக்களுக்கு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 40 நாட்களில் 10 புலிகள்  உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திங்க ளன்று தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நீல கிரி மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனத் துறை அதிகாரிகளிடம் நேரில் விசாரணை நடத்து கின்றனர்.

பாஜக - அதிமுக கூட்டணி தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  சென்னை ராயப்பேட்டையில் திங்களன்று நடை பெறுகிறது. கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகி கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என அதிமுக தலைமை கூறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பகுதியில் பூபதிராஜா என்பவரின் டீக்கடைக்கு ஒரு  மாதத்திற்கு ரூ.61,000 மின் கட்டணம் விதிக்கப் பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி யது. இது தொடர்பாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த நிலை யில், மின்கட்டணம் பதிவு செய்த கணக்கீட்டாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முக்குன்றம் ஊராட்சியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மணிகண்டன் (வயது 16) புல் அறுத்துக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிதாக காணப்படும் குமிழித்தூணில் வருணன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் பூங்காவிற்கு அருகே பங்களா வீட்டில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் கைது செய்யப்பட்ட நிலையில், 3 மேற்கு வங்க மாநில இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பா பிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்  கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு ஏன் பெண் தலைவரே இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியுள்ளார்.

அண்ணாமலைக்கு உளவியல் சிக்கல் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர் சித்துள்ளார்.