states

பிப்.1 முதல் அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்

சென்னை, ஜன. 24 - காலவரையற்ற செல்போன் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் அறிவித்துள்ளது. அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் புதனன்று (ஜன.22) சென்னையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ஐசிடிஎஸ் திட்டத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பணிகளை இணைத்து அங்கன்வாடி ஊழியர்கள் செய்கின்றனர். பணிச்சுமை யால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2024 நவம்பர் 20 தேதி இயக்குனர் அலு வலகம் முற்றுகை போராட்டத்தை  அறிவித்தோம். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய இயக்குநர், 20  கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி யளித்தார். அதில், இரண்டு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்றிய அரசின் போஸான் டிராக்கர் பணிக்கான செயலி வாரத்திற்கு இரண்டு முறை மேம்படுத்தப் (அப்டேட் செய்யப்) படுகிறது. ஊழியர்களுக்கு பயிற்சி  அளிக்காமல் சாத்தியமற்ற பணி களைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறது. செல்போன் கொடுத்து 6 ஆண்டு களை கடந்து விட்டது. பழுதடைந்த செல்போன்களால் முறையாக பணி யாற்ற முடியவில்லை. இந்த நிலை யில், காலை 8.30 மணிக்கே மையத் திற்கு குழந்தைகளை வரவழைத்து புகைப்படம் எடுத்து பதிவேற்ற (அப் லோட்) வேண்டும். படத்தில்  உள்ள குழந்தைகளின் எண்ணிக்கு ஏற்ப உணவு செலவு தொகையை கணக்கிட வேண்டும்  என்று அறி வுறுத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுத்த பிறகு வரும் குழந்தைகளுக்கு எப்படி உணவு கொடுப்பது? இந்த நடைமுறையால் திட்டத்தின் நோக்கம் முற்றிலும் தடைபடுகிறது. எனவே, அனைத்து மையப் பணியாளர்களுக்கும் உடனடியாக புதிய செல்போன் வழங்க வேண்டும். அப்டேட் என்ற பெயரில் புதுப்புது  பணிகளைச் செய்ய நிர்பந்திப்பதை  கைவிட வேண்டும். பேச்சு வார்த்தையில் இயக்குநர் ஒப்புக் கொண்ட கோரிக்கைகளை முழுமை யாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி முதல் செல்போன் பணி புறக்கணிப்பு  போராட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.