states

பட்டாசுகளால் விபத்து ஏற்பட்டால் தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

சென்னை, அக்.29-  பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று அணைக்கும் வகையில் தீயணைப்புபடை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்.  பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினர் குறிப் பாக வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகள், குடிசைப் பகுதிகள் உள்ள பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக தீ  விபத்து ஏற்பட்டால், உயிர்ச் சேதம் இன்றி உடனடி யாக தீயை அணைக்கும் பொருட்டு இந்த முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரி வித்தனர். அவசர உதவி எண்கள் மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதே னும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி எண் 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர  உதவி எண் 101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108, தேசிய உதவி எண் 112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, அசம்பாவிதங்களை தவிர்க்கும்படி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.