- சென்னையில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியில் பிரக்ஞானந்தா மற்றும் 10 வீராங்கனை கள் இடம்பெற்றுள்ளனர்.அணியின் வழிகாட்டி யாக முன்னாள் உலக சாம்பியன் விஸ்வ நாதன் ஆனந்த் செயல்படு வார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
- பெட்ரோல் ,டீசலுக்கு மாற்றாக பசுமை ஹைட்ர ஜன் எரிபொருள் தயா ரிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு சிறப்பு மையம் அமைக்கப்படும் என்று தமிழக சுற்றுச் சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள் ளார்.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
- லட்சத்தீவுகளில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முன்பு இருந்தது போல மீன், முட்டை போன்ற இறைச்சியை சேர்க்கவும், பால் பண் ண்ணைகளும் தடை யின்றி இயங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.தீவின் நிர்வாக அதிகாரி, இறைச்சி உணவுகள், பால் பண்ணை இயங்க தடை விதித்த ஆணைக்கு எதிராக உத்தரவிடப் பட்டுள்ளது.
- தலைநகர் தில்லியில் தகுதிச் சான்றிதழ் இல்லா மல் வாகனங்களை இயக்கினால் சிறைத் தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.
- கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் கனரக வாகனம் சென்றால் பறி முதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.