தீபாவளி மறுநாள் விடுமுறை
சென்னை, நவ. 6 - தீபாவளி நவம்பர் 12 - ஞாயிறன்று வருவதால், பண்டிகைக்காக ஊருக்குச் சென்றவர்கள் மறுநாளே பள்ளி, கல்லூரிகளுக்குத் திரும்புவதில் சிரமம் ஏற் படும் என்பதால், திங்கட்கிழ மையும் விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பல் வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று 13.11.2023 அன்று விடுமுறை யும், இதனை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று வேலைநாளாகவும் இரு க்கும் என்றும் அரசு அறி வித்துள்ளது.
குடும்ப அட்டைகள் பொங்கலுக்குள் வழங்கப்படும்
சென்னை, நவ.6- புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடை பெற்று வருவதால், அவற்றை பொங்கலுக்குள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் சக்கர பாணி தெரிவித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் திடீர் விலகல்
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் நவம்பர் 30 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்த லில் ஆளும் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சி யை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜக பலத்த அடி வாங்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளி யாகியுள்ளது. இந்நிலையில், சந்திராயன் குட்டா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட் பாளர் சத்யநாராயணா முதிராஜ் திடீ ரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உடல்நலப் பிரச்ச னைகளால் போட்டியில் இருந்து விலகி யுள்ளதாக பாஜக மேலிடத்தில் அவர் தகவல் தெரிவித்துள்ளார். முன்னணி பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சி யில் இணைந்து வரும் சூழ்நிலை யில், வேட்பாளர் ஒருவர் போட்டியிலி ருந்தே விலகி இருப்பது பாஜகவை கடும் அதிர்ச்சியில் உறைய வைத் துள்ளது.
கெஜ்ரிவால் மனைவிக்கு சம்மன் அனுப்ப உயர்நீதிமன்றம் தடை
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு தில்லி யின் சாந்தனி தொகுதி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஷாஹீதாபாத் தொகுதி என இரண்டு தொகுதியில் வாக்காளர் பெயரை பதிவு செய்திருப்பதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்றும் பாஜக தலைவர் ஹரிஷ் குரானா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சுனிதா கெஜ்ரிவால் நவம்பர் 18 அன்று ஆஜராக தில்லி பெருநகர நீதி மன்றம் சம்மன் அனுப்பியது. சம்மனுக்குத் தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சுனிதா கெஜ்ரிவால் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை திங்க ளன்று விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் சம்மனுக்கு 2024 பிப்ரவரி 1 வரை தடை விதித்தது. மேலும் அன் றைய தினத்துக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.