ஐரோப்பிய கால்பந்து - 2024 பிரான்ஸுக்கு அதிர்ச்சி ; இறுதியில் ஸ்பெயின்
17ஆவது சீசன் ஐரோப்பிய கால் பந்து தொடர் ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நள்ளிரவு நடைபெற்ற முதல் அரை யிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலிருந்தே இருநாட்டு வீரர் களும் அதிரடி விளையாட ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் முனானி கோலடித்து அசத்தினார். அடுத்த 12 நிமிட இடை வெளியில் அதாவது 21ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் லாமினே கோலடித்தார். இந்த கோல் சம்பவத்தி ற்கு பின்னர் பிரான்ஸ் வீரர்கள் பதி லுக்கு கோலடிக்கும் முனைப்பில் அதி ரடியாக விளையாட ஆரம்பித்தனர். ஆனால் பிரான்ஸ் வீரர்களின் பதிலடி ஆட்டம் அடுத்த 3 நிமிடம் கூட நீடிக்க வில்லை. ஸ்பெயின் வீரர் டேனி 25ஆவது நிமிடத்தில் கோலடிக்க பிரா ன்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில்உறைந்தனர். 2ஆவது கோலடித்த பின்பு ஸ்பெயின் வீரர்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். பிரான்ஸ் வீரர்கள் பல்வேறு வியூகம் வகுத்த பொழுதி லும், ஸ்பெயின் அணியின் தடுப்புச் சுவரை தகர்த்து கோலடிக்கமுடியவில்லை. இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 5-ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறியது. சூப்பர் பார்மில் சுழன்ற பிரான்ஸ் அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அரையிறுதியோடு வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோபா அமெரிக்கா - 2024 29ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 48ஆவது கோபா அமெரிக்கா தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், புதனன்று அதிகாலை நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டி னா - கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் அந்நாட்டின் முன்கள வீரர் ஆல்வரேஜ் கோலடித்து அசத்தினார். பதிலுக்கு கோலடிக்க கனடா அணியின் வீரர்கள் தீவிர முயற்சி எதுவும் பலனளிக்காத நிலையில், 51ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி கோலடிக்க கனடா வீரர்கள் சோர்வடைந்தனர். மெஸ்ஸியின் கோல், ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்த நிலையில், ஆட்டநேர முடிவில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 29ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
மகாராஷ்டிரா பாஜக அரசிற்கு பாடம் எடுத்த பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி
17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் அணி மீண்டும் டி-20 உல கக்கோப்பையை வென்றுள்ள நிலை யில், இந்திய கிரிக்கெட் வாரியம் கோடிக்கணக்கில் பல்வேறு பரிசுத் தொகையை அறிவித்தது. அதே போல மகாராஷ்டிரா பாஜக அரசும், கோப்பை வென்ற இந்திய அணியில் விளையா டிய தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர் களுக்கு பரிசுத்தொகை மற்றும் கவுரவ விருதுகளை வழங்கியது. இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் பிரிவின் முன்னணி வீரரான சிராக் ஷெட்டி விளையாட்டுப் பிரிவில் மகாராஷ்டிரா அரசு பார பட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள் ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சிராக் ஷெட்டி பேசுகையில், “மகாராஷ்டிரா அரசு கிரிக்கெட்டை மட்டும் கொண்டாடுகிறது, மற்ற விளை யாட்டுகளையும் - விளையாட்டு வீரர்களையும் கொண்டாடுவதில்லை. தாமஸ் உலகக்கோப்பை, டி-20 கிரிக் கெட் உலகக்கோப்பைக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. பேட்மிண் டன் சாம்பியனான இந்தோனேசி யாவை வீழ்த்தி இந்தியா தாமஸ் கோப்பையை வென்றது. அந்த அணியில் நானும் முக்கியப் பங்காற்றி யிருந்தேன். மகாராஷ்டிராவிலிருந்து இந்திய பேட்மிண்டனில் பங்கேற்ற ஒரே வீரர் நான்தான். ஆனால், மகா ராஷ்டிரா அரசு எங்களைக் கொண்டாட வில்லை. உலகக்கோப்பையை வென்ற கிரிக்கெட் நட்சத்திரங் களைக் கவுரவிக்கும் அரசாங்கம், இந்தியாவிற்காக விளையாடி பெரு மை சேர்க்கும் மற்ற விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பையும் அங்கீ கரித்துக் கொண்டாட வேண்டும்” என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்.