அகர்தலா, பிப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரி புரா மாநில மாநாடு பேரணி பொதுக்கூட்டத்து டன் வியாழக்கிழமை தொடங்கியது. பிரதி நிதிகள் மாநாடு வெள்ளி, சனிக்கிழமை நடை பெற்றது. மாநாட்டு பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் பேசினார். “ போதும் போதும். ஓட்டுக் கொள்ளை யர்கள் ஆட்சி”. பாஜக ஆட்சியில் மோசடி யும், கொள்ளையும் தான் நடைபெறுகிறது. 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் குரல் களை ஒடுக்கும் பாஜக-வை தோற்கடிக்க வேண்டும். மக்கள் இடது முன்னணிக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். அவர் மேலும் பேசுகையில், திரிபுராவில் வேலைவாய்ப்பு, உணவு, ஊதியம், பணி நீக்கம் செய்யப்பட்ட 10323 ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
அவர்களுக்கு வழங்கவேண்டிய இதர சலுகைகளை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஏழாவது ஊதியக் குழுவில் நிறைவேற்றப் படும் எனக் கூறிய பாஜக அரசு இப்போது அதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது. வருமானம் மற்றும் வேலைக்கான ஆதாரத்தை உருவாக்குங்கள். வேலைக்கு ஆட்களை சேர்ப்பதில் நிலவும் முறைகேடு களை தடுத்து நிறுத்துங்கள். ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, அமைதியான ஆட்சிக்காக நாங்கள் போராடுவோம். மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி யளிப்புத் திட்டத்தின் கீழ் 200 வேலை நாட்கள் வேலை வழங்குவோம் என்ற அறிவிப்பு என்னவானது? தினக்கூலி ரூ.340 ரூபாய் எங்கே? ஊரக வேலையில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்குப் பதில் இயந்திரங்களைப் புகுத்தி மண்டல அளவில் தொழிலாளர்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கு எதிராக ஊராட்சி அளவில், மாவட்ட அளவில் போராட்டம் நடத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, குறைந்த பட்சம் 100 நாள் வேலை வழங்குங்கள், ஊதியத்தை உயர்த்துங்கள், கொள்ளைய டிப்பதை நிறுத்துங்கள், வாரம் ஏழு நாட்கள் ஊதியம் வழங்குங்கள் என பாஜக அரசை கேட்டுக்கொள்கிறது. மாவட்ட அளவில் தொழிலாளர்களின் பணத்தை கொள்ளையடிப்பதைப் தடுக்க மக்களை அணி திரட்டி கட்சி தொடர்ந்து போராடும். பொதுப்பணித்துறை, ஊரக வேலை வாய்ப்பு, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, வனம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் நிரப்பப்பட்டது. இதன் மூலம் பலருக்கு அரசு வேலை உறுதிப் படுத்தப்பட்டது. தற்போது காலிப் பணி யிடங்களை நிரப்புவது முற்றாக நிறுத்தப் பட்டுள்ளது. ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? காலிப்பணியிடங்களை நிரப்புங்கள் என மாநில அரசிற்கு எதிராக மக்கள் குரலெ ழுப்ப வேண்டும். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவை களை நிறைவேற்றுங்கள் என பாஜக அரசை நோக்கி மக்கள் குரல் எழுப்ப வேண் டும். தற்போது மாநிலத்தில் மோசடியும், கொள்ளையும் மட்டுமே நடக்கிறது என்று மாணிக் சர்க்கார் குறிப்பிட்டார்.