சென்னை,அக்.24- நவம்பர் 16, 17, 23, 24 ஆகிய தேதி களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறும் மாநிலங் களைத் தவிர, அனைத்து மாநிலங் களிலும் 1.1.2025 ஐ தகுதியேற் படுத்தும் நாளாகக் கொண்ட புகைப் படத்துடன் வாக்காளர் பட்டியலின் வருடாந்திர சுருக்கமுறைத் திருத்தப் பணிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், தமிழ்நாட்டில் அங்கீ கரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வியாழனன்று (அக்.24) சென்னை தலைமைச் செயலக கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது ஆலோசனை மற்றும் கருத்துக்களை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ (திமுக), என்.ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக), ஐ.ஆறுமுக நாயினார், ப.சுந்தராசன் (சிபிஎம்), ஜி.ஆர்.ரவீந்திரநாத் (சிபிஐ), சாகுல் அமது (காங்.), கு.நல்லதம்பி (தேமு திக), ஆம் ஆத்மி, பிஎஸ்பி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அக்.29 வரைவு பட்டியல் வெளியீடு இதைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்ட அறிக்கையில், இம்மாதம் 29 ஆம் தேதி ஒருங்கி ணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரைக்கும் கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் குறித்து விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்கள் நவம்பர் 16 சனிக்கிழமை மற்றும் 17 ஞாயிற்றுக்கிழமை அதேபால் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 18 வயது பூர்த்தியானவர்களும், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய விரும்போரும் தங்களது பெயர் களை பதிவு செய்து கொள்ளலாம். இறுதிப் பட்டியல் புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள படிவம் 6. வெளிநாடு வாழ் வாக்கா ளர் ஒருவர் தனது பெயரை வாக்கா ளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 6ஏ விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் எண்ணை சமர்ப்பிக்க படிவம் 6 பி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். ஒருவரின் பெயரை சேர்க்க ஆட்சேபனை இருந்தாலும், வாக்கா ளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்கவும் படிவம் 7 விண்ணப்பிக்க வேண்டும். ஒரே தொகுதிக்குள் அல்லது தொகுதிகளுக்கிடையே குடி யிருப்பை மாற்றினாலும், திருத்தம் செய்யவும் மாற்றுத்திறனாளிகள் படிவம் 8 பூர்த்தி செய்து தர வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.