சென்னை, மார்ச் 9 - கல்விச் செயற்பாட்டாளர்- ஆசிரியர் உமா மகேஸ்வரியின் கருத்துரிமையைப் பறிக்கும் பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமுஎகசவின் மாநிலத் தலை வர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கல்விச்செயற்பாட்டாளரும் ஆசிரியருமான உமாமகேஸ்வரி இன்றைய கல்விச்சூழலை மேம்படுத்தும் நோக்கிலான தனது கருத்துகளை நூல் வடிவிலும் சமூக ஊடகங்களில் பதிவுக ளாகவும் எழுதிவருபவர். இவ்வாறான அவரது கருத்துகள் அரசை விமர்சிப்பதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் இருப்பதாக கூறி அவரை பள்ளிக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்திருப்பதை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது. சமூக அக்கறையுள்ள ஓர் ஆசிரியர் என்கிற முறையில் கல்வித்துறையில் நிலவும் சிக்கல்கள் குறித்து உமாமகேஸ்வரி முன்வைத்த கருத்து களை உள்வாங்கிக் கொள்வதற்கு பதிலாக அவ்வாறு எழுதுவது தண்டனைக்குரிய குற்றம் என்று பணியிடை நீக்கம் செய்திருப்பதானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பறிக்கும் ஆணவப்போக்காகும். இதன்பொருட்டான நேரடி விசாரணை யின்போது செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் மாவட்ட கல்வி அலுவலரும் உமாமகேஸ்வரியை நடத்திய விதம் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். விமர்சனத்தையும் அவ தூறையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஜனநாயக முதிர்ச்சி துளியுமற்றவர்களாக இந்த அலுவலர் கள் அவரை நடத்தியுள்ளனர். அவரது அலைபேசியை பிடுங்கி அணைத்து வைத்துக் கொண்டதுடன் தேசிய கல்விக் கொள்கை யை விமர்சிக்கக் கூடாதென்றும் பள்ளிக் கல்வித் துறையில் நிலவும் சிக்கல்கள் குறித்து பேசவோ எழுதவோ கூடாதென்றும் மிரட்டியுள்ளனர். தேசிய கல்விக்கொள்கையை ஏற்க முடியாதென தமிழ் நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அந்தக் கொள்கையை விமர்சிக்கக் கூடாதென்று மிரட்டிய தானது தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. அவரது தரப்பு விளக்கத்தை ஏற்காமல், மன்னி ப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கும் படி அலுவலர் கள் பணித்துள்ளனர். மேலும், அலைபேசியை உயிர்ப்பித்து முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்க ளில் இருந்த அவரது பதிவுகள் அனைத்தையும் தங்களது கண்முன்னேயே அழிக்கும்படி மிரட்டி அழிக்க வைத்துள்ளனர்.
இச்செயலானது கருப்பர் கூட்டத்தின் வீடியோ பதிவுகளை இணைய வெளியிலிருந்து அழித்த காவல்துறையின் செயலை நினைவூட்டுகிறது. உமாமகேஸ்வரியின் பணியிடை நீக்கம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த இரண்டு நாட்களாக கல்வியாளர்களும் அமைப்புக ளும் எழுப்பி வரும் நிலையிலும்கூட பள்ளிக்கல்வித் துறை இதுகுறித்து பதிலளிக்காமல் இருப்பதன் மூலம் அலுவலர்களின் இந்த நடவடிக்கை துறை யின் தலைமையுடைய ஒப்புதலோடுதான் நடந்துள் ளது என்கிற கருத்து வலுப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் அரசை விமர்சிக்கக்கூடாது என்கிற காலனியாட்சிக்கால நடத்தை விதிகளை நீக்கித் தொலைப்பதற்குப் பதிலாக அதை இன்ன மும் பயன்படுத்தி கருத்துரிமையைப் பறிப்பது ஜனநாயகச் சமூகத்திற்கு ஏற்புடையதல்ல. பேரா சிரியர் ஒருவரது ‘வாட்ஸ் ஆப்’ செய்திக்காக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின்மீதான இன்றைய தீர்ப்பில் “அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்க குடி மக்களுக்கு உரிமை இருக்கிறது, அது உணர்ச்சி யின் வெளிப்பாடு” என்று உச்ச நீதிமன்றம் கூறி யிருப்பதை கவனத்தில் கொண்டு உமாமகேஸ்வரி யின் பணியிடை நீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறையை யும் தமிழ்நாடு அரசையும் தமுஎகச வலியுறுத்து கிறது. இவ்வாறு தமுஎகச அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.