சென்னை, அக்.26- பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளில் நாள் தோறும் தனது முகம் வர வேண்டும் என்பதற்காக, அரசை குறை சொல்லி எடப் பாடி பழனிசாமி எதையாவது உளறி வருகிறார் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு வேலை இல்லாததால் இதை தொடர்ந்து செய்கிறார் போலும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டா லின் சனிக்கிழமை(அக். 24) சென்னை, அண்ணா அறி வாலய வளாகத்தில் செய்தி யாளர்களுக்கு பேட்டிய ளித்தார். அப்போது, மகளிர் உரி மைத் தொகையை தற்போ தைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர் கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில ளித்த முதல்வர், “அவர் அப்ப டித் தான் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது. அவர் பெயர் பத்திரிகையில் வரவேண்டும். அவர் முகம் அடிக்கடி தொலைகாட்சி யில் வரவேண்டும் என்பதற் காக சொல்லிக் கொண்டி ருப்பார். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவ தில்லை” என்றார். மேலும், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஒன்றிய அமைச்சருடன் இன்று நடை பெற்ற ஆய்வு குறித்த கேள் விக்கு, “ஏற்கனவே ஒன்றிய அரசு அமைச்சரவை கூட்டத் தில் முடிவெடுத்து நிதி ஒதுக்கி அறிவித்திருக்கிறார் கள். அதனால் அந்த நிதியை விரைவில் வழங்கவேண்டும் என்று ஒன்றிய அமைச்சரி டம் நாங்கள் சொல்லியி ருக்கிறோம்” என்று கூறி னார்.