states

img

போதைப்பொருள் கடத்தல் பஞ்சாப் பாஜக தலைவர் கைது

மோடி பிரதமர் ஆன பின்பு, தனது நெருங்கிய நண்ப ரான அதானிக்கு நாட்டின் முக்கிய துறைமுகங் களை குத்தகைக்கு கொடுத்தார். அதானி கையில் துறை முகங்கள் சென்ற பின் நாட்டின் பெரும் பாலான மாநிலங்க ளில், அதாவது குஜ ராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்க ளில் போதைப்பொருள் கடத்தல் மிக அதிகமான அளவில் நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையாளர்கள் அனை வரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என கைது நடவடிக்கை மூலம் செய்திகள் வெளியாகி வருவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தலைவராக இருக்கும் சத்கர் கவுர் (பெண்) போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள் ளார். பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரான மொஹாலிக்கு அருகே கரார் பகுதியில் 100 கிராம் ஹெராயின் போதைப்பொருளை விற்க முயன்ற விவ காரத்தில் பாஜக தலைவர் சத்கர் கவுர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஜஸ்கீரத் சிங் ஆகியோரை போதைப்பொருள் தடுப்புப் படையினர் (ANTF) கைது செய்து சிறையில் அடைத்தனர்.