சென்னை,மே 6- வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதி யில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 10 ஆம் தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அசானி என பெயர் வைக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் போதிமலையில் 2 பழங்குடியினர் கிராமங்க ளில் சாலை அமைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை அமைப்பதால் வெட்டப்படும் மரங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வனத்துறைக்கு அரசு தர வேண்டும் என்றும் அரசு வெட்டும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
பருத்தியை மீண்டும் அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கரூரில் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மே 13ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.