பெரம்பலூர், அக்.14 - பெரம்பலூர் நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் ரூ.10. 44 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமை யில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பெரம்ப லூர் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கடந்த தீபாவளியின் போது தனியார் ஆம்னி பேருந்து உரிமையா ளர்களை அழைத்து கூடுத லாக வசூலிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. கடந்த ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையின் போது ஆம்னி பேருந்து அதிக கட்டணம் வசூல் என புகார் எழுந்த வுடன், போக்குவரத்து ஆணையர் அறிவுரை வழங்கினார். அக்.24 ஆம் தேதி ஆம்னி பேருந்து உரிமையாளர் களுக்கு இதுகுறித்து அறி வுரைகள் வழங்க கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத் தில் கட்டண வசூல் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறி வுறுத்தப்படும். அந்த கூட்டத்தில் ஆம்னி பேருந்து கள் அதிகமாக கட்டணம் வசூல் செய்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். தனி யார் ஆப் (செயலி)-களை பொறுத்தவரை, எல்லா ஆட்களையும் அரசு உட் கார்ந்து பார்ப்பது சாத்தி யமற்றது. விருப்பப்பட்டு ஆப்கள் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்திச் செல்பவர்களை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பொது மக்கள் இதுகுறித்து புகார் அளித்தால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.