கிருஷ்ணகிரி,ஜன.7 – பட்டு வளர்ச்சி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் முதலாவது மாநில பேரவை ஓசூரில் (ஜன.7) செவ்வாயன்று நடைபெற்றது. தின்னுர்பட்டு வளர்ச்சி வளாகம் முகப்பில் சங்கத்தின் கொடியேற்றத்துடன் மாநிலத் தலைவர் ஆர்.துரை தலைமையில் பேரவை தொடங்கியது. மாநிலத் துணைத் தலைவர் கே.கந்தசாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வர வேற்பு குழுத்தலைவர் ஜி.சரவணபவன் வரவேற்றார்.முன்னாள் பொதுச் செயலாளர் பி.சுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் பி.கோவிந்தசாமி சங்கத்தின் வேலை அறிக்கையை சமர்பித்தார். மாநில பொருளாளர் எஸ்.தேவராஜன் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். வாழ்த்திப் பேசிய முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு , பட்டு வளர்ச்சி துறைக்கு நிரந்தர ஊழி யர்களை நியமிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தியதையும் அதன்பிறகு, மாநில முழுவதும் 400 நிரந்தர ஊழியர்கள் பட்டு வளர்ச்சி துறையில் பணியில்அமர்த்தப் பட்டதை சுட்டிக்காட்டினார். கவுரவிப்பு 75 வயது நிரம்பிய 25 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் இந்த பேரவையில் கவுரவிக்கப்பட்டனர். இப்பேரவையில் கிருஷ்ணகிரி, கோவை,திருச்சி,தென்காசி,தர்மபுரி, சேலம்,திண்டுக்கல்,வேலூர் ஆகிய 8 மண்டலங்களில் இருந்து 550 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர் சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். மாநில பேரவை வரவேற்பு குழு செயலாளர் கே. ஸ்ரீநிவாசலு நன்றி கூறினார். மாநில துணைத் தலைவர்கள் ஆர்.நாக ராஜன், பி.கே.பெரியசாமி, பி.சந்திரசேக ரன், மாநில செயலாளர்கள் பி.மாயக் கண்ணன், வி.சண்முகம், ஆர்.சந்திரகாந்தன் ஆகியோர் தீர்மானங் களை முன்மொழிந்தனர்.
தீர்மானங்கள்
ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு அனைத்து பதவிகளிலும் இளையவர், முதியவர் ஊதிய முரண்பாடுகளை களைய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் பிரச்சனைகள் குறித்து உயர்நீதி மன்ற தீர்ப்புகள் அடிப்படையில் மேல்முறை யீடு செய்வதை கைவிட வேண்டும், நிரந்தர தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்றபின் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் தொகையை வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய உயர்வுக்கு முதல் நாள் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு 25.4.2018 படி ஊதிய உயர்வு வழங்குவது போல் விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்த வாரிசு தாரர்களுக்கு உடனடியாக பணி நிய மனம் வழங்க வேண்டும், கோலட்டி பட்டுப் பண்ணையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிரந்தர தொழிலாளர்களுக்கு சிறப்பு வைப்பு நிதி(spl) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு தேர்தல் காலத்தில் பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இனியும் காலதாமதம் செய்யாமல்.நிறை வேற்ற வேண்டும். மலைப் பிரதேசங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணியில் இருக்கும் அலுவலர்களுக்கு வழங்கப்படு வது போல் மலைவாழ் படி குளிர்கால படி அவசியம் வழங்க வேண்டும்,பட்டு வளர்ச்சித் துறை பாதுகாக்க ஒப்பந்த முறையை கைவிட்டு நிரந்தர ஊழி யர்களை பணியில் நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.