states

தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவதை கைவிட வேண்டும்!

சென்னை, அக். 26- தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி இயக்குவதை அரசு கைவிட வேண்டும் என்று போக்கு வரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள் ளது. போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமை (அக். 26) சென்னை ஓட்டேரியில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் கே.ஆறுமுக நயினார், ஏ.பி.அன்பழகன், சசிகுமார் (சிஐடியு), கே.எம்.செல்வராஜ், என். முருகராஜ், கே.நேருதுரை (ஏஐ டியுசி), திருமலைச்சாமி, டி.வி.பத்ம நாபன், கே.குணசேகரன் (டிடிஎஸ் எப்), இராம.முத்து குமார், இரா.வீர மணி, க.வடிவேல் (பாட்டாளி தொழிற் சங்கம்) உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கே.ஆறுமுக நயி னார் கூறுகையில், போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படை யில் வாடகைக்கு அமர்த்தி இயக்கு வது என அரசு மேற்கொண்டுள்ள நட வடிக்கையை கைவிட வேண்டும்.  போக்குவரத்துக் கழகங்களுக்கு வரவுக்கும், செலவுக்குமான வித்தி யாசத் தொகையை வழங்க வேண்டும்.  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்ப டையில் பணியாளர்களை நியமனம் செய்யக்கூடாது. வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிக்க வேண்டும், கடந்த 2022 நவம்பருக்கு பின் பணி ஓய்வு பலன்கள் வழங்காத நிலையில், தற்போது 2023 மார்ச் வரை பணப் பலன்கள் வழங்க அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. அனைத்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வு கால பலன்களை முழுமையாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணப் பலன்களை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழி யர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்தங்களை முறை யாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே எல்பிஎப் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் உரிய அவகாசம் இல்லாததால் வேறு தேதியில் கூட்டத்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டனர். அதனடிப்ப டையில் வரும் நவம்பர் 12ஆம் தேதி மீண்டும் கூட்டத்தை நடத்தி மேற்கண்ட கோரிக்கைகளை எந்த வகையில் அரசிடம் வலியுறுத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.