சென்னை,ஏப்.29- திருவண்ணாமலை விசாரணைக் கைதியின் உடற்கூராய்வு அறிக்கை கிடைத்ததும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் வெள்ளி யன்று (ஏப்.29) கேள்வி நேரம் முடிந்ததும் திருவண்ணாமலை விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலை மாவட்டம், தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி அவரது வீட்டில் விஷச் சாராயம் வைத்திருந்ததாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த ஏப்.26 அன்று வழக்குப் பதிவு செய்து, கைது செய்து திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையிலிருந்த தங்க மணிக்கு ஏப்ரல் 27 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு இரவு சுமார் 7.40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப் பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நீதித்துறை நடுவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப்பெற்ற வுடன், உரிய விசாரணை நடத்தப் பட்டு, இந்த அவைக்குத் தெரிவிக்கப்படும்”என்றார்.