பட்டாசு ஆலை விபத்து: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
விருதுநகர், பிப்.17- விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத் தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவா ரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டா யிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் சனிக்கிழமை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்துக்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்க ளது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்த வருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல மைச்சரின் பொது நிவாரண நிதியி லிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
குரங்கு காய்ச்சல்: தமிழக - கர்நாடக எல்லையில் சோதனை
சேலம்,பிப்.17- கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவலையடுத்து, தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து மருத்துவப் பரிசோ தனை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா, உத்திர கனடா, சிக்மங்களூரு ஆகிய மாவட்டங் களில் 53 பேருக்கு அண்மையில் குரங்கு காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப் பட்டது. இந்நிலையில், தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு வனப்பகுதி வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, தமிழக எல்லையான கொளத்தூரை அடுத்த காரைக்காடு சோதனைச் சாவடியில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளியன்று நடந்தது. கர்நாடகாவிலிருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என கொளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் விமலா தலை மையிலான குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
12வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
செங்கல்பட்டு,பிப்.17- தமிழகத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுவரை 11 உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடை பெற்றுள்ளன. அந்த வகையில் 12வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு செங்கல்ப்ட் மாவட்டம் காட்டாங்குளத்துரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத் தமிழ்ப்போராயத்தின் சார்பில் “உலக மொழிகளில் தமிழின் தாக்கம்” என்னும் தலைப்பில் வரும் மே மாதம் நடை பெற உள்ளது. இம்மாநாட்டுக்கான முதல் ஆலோ சனைகள் கூட்டம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவன வளாகத்தில் நிறுவனர் பாரி வேந்தர் தலைமையில் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி முன்னிலை யில் நடைபெற்றது. . உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றப் பொறுப்பாளர் களான பேராசிரியர்கள் இராம குரு நாதன், பாரதிபாலன், அருட்செல்வன், அபிதா சபாபதி, நந்தன் மாசிலாமணி, சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இயக்குநர்கள், புலத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் பங்கேற்று தங்களது கருத்துரைகளை வழங்கினர்.