states

நிலம் ஒப்படைக்கும் அதிகாரம்; ஆளுநரிடமிருந்து திரும்பப்பெறுக!

புதுச்சேரி, ஜூன்.27- அம்பானி, அதானிகளுக்கு புதுச்சேரி நிலத்தை ஒப்படைக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதேச செயலா ளர் ஆர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்ட ங்கள் குறித்த சீராய்வு கூட்டத்தில் நிலம் சம்பந்தமான அதிகாரத்தைத் துணைநிலை ஆளுநருக்கு வழங்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இது புதுச்சேரி மாநிலத்திற்கும், மக்க ளுக்கும் பாதகமான பல விளைவு களை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது. தற்பொழுது நிலம் எடுக்கவும், தேவைகளுக்கேற்ப ஒதுக்கவும், மக்களுக்குக் கொடுப்பதற்குமான அதிகாரம் சட்டமன்றத்திற்குத்தான் உள்ளது. பட்டா மாற்றம், நிலத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பது, நிலத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுப்பது, குடியிருப்போருக்கு உரிமையாக்குவது ஆகிய சட்டங்கள் அமலில் உள்ளன. இவைகள் ஒன்றிய அரசின் நிர்வாகியான ஆளுநர் கைக்கு மாறினால் புதுச்சேரியில் கையகப்படுத்திப் பயன்படுத்தப்படாமல் கரசூர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் அம்பானி, அதானி போன்ற பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படும் அபாயம் உள்ளது.

புதுச்சேரி மக்களின் தேவைகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் நிறை வேற்றப்படுவதுதான் சரியான ஜனநாயக நடைமுறையாக இருக்க  முடியும். அதில் தவறுகள் முறைகேடு கள் நடக்கும் பட்சத்தில் மக்கள்  அவர்களைப் பொறுப்பாக்கு வார்கள். நிலம் கையகப்படுத்தும் மற்றும் விநியோகிக்கும் பொறுப்பு ஆளுநர் கைக்கு மாறினால் யார் அவரை கேள்வி கேட்க முடியும். அவர் மக்கள் பிரதிநிதி இல்லை என்ற நிலையில் மக்களுக்குப் பதில்  சொல்லும் தார்மீக கடமை ஆளு நருக்கு அவசியமில்லாத ஒன்றாகி விடும். இந்தக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் இதற்கு எவ்வித ஆட்சேபனையும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. அவர் பதவியில் நீடிப்பதற்காகச் சூழ்நிலைக் கைதி யாக மாறி வழக்கம்போல் மவுனம் காத்திருக்கிறார். மாநில உரிமை காக்க அந்தக் கூட்டத்தை முதல்வர் புறக்கணித்து வெளியேறி இருக்க வேண்டும். ஏற்கனவே ஒன்றிய அரசு  மாநிலங்களின் உரிமைகள் அனைத் தையும் நேரடியாகவும், ஆளுநர் மூல மாகவும் பறித்து வரும் நிலையில், நிலம் சம்பந்தமான அதிகாரம் ஆளு நரிடம் செல்வது பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். ஊழல்,  கமிஷன், முறைகேடுகள், அத்து மீறல்கள் சகஜமாகிவிடும். எனவே நிலம் சம்பந்தமான அதிகாரம் மாநில  அரசிடமே நீடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.