சென்னை, செப்.17 - மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புலம்பெயர் தொழிலாளர்களை சிபிஎம் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். மேற்கு வங்கத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் தவித்து வந்தனர். மேற்கு வங்கத்திற்கே திரும்பிச் செல்ல டிக்கெட் எடுக்கக்கூட பணம் இல்லாமல், உணவு இல்லாமல் நடைமேடையில் குடிநீரை மட்டும் குடித்துக் கொண்டு இருந்தனர். அவர் களில், சமர் கான் (வயது 35), மானிக் கோரி (50), சத்யா பண்டித் (33), ஆசித் பண்டித் (35) ஆகிய 4 பேர் திங்களன்று (செப்.16) திடீரென மயங்கி விழுந்தனர். இதனை கண்ட ரயில்வே காவல்துறை யினர் அவர்களை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு காவல்துறையினர் உணவு ஏற்பாடு செய்து கொடுத்தனர். அனைவரை யும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில், மருத்துவனையில் உள்ளவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச்செய லாளர் ஜி.செல்வா, துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர்.குமார், வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்து விசாரித்தனர். மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தரமான தீவிர சிகிச்சை அளிக்கவும், எஞ்சியவர்களை அரசு தனது பொறுப்பில் தங்க வைத்து உணவு வழங்க வும், பாதுகாப்பாக அவர்களது சொந்து ஊருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.செல்வா, தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.