புதுதில்லி, மே 12- எல்ஐசி பங்கு விற்பனையை உடனே நிறுத்த வேண்டும் என்று பாஜக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் புதுதில்லியில் மே 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு: ஒன்றிய அரசு, நாட்டின் சொத்துக்களை விற்று பணமாக்கும் திட்டத்தை (NMP-National Monetisation Pipeline) அமல்படுத்துவதன் மூலம், நாட்டின் சொத்துக்களை தனியார் சூறையாடுவதற்கு வசதிசெய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆயுள் இன்சூரன்ஸ் கழகத்தை தனியார்மய மாக்குவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் முறையை அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. எல்ஐசி நிறுவனம், சுமார் 29 கோடி பாலிசிதாரர்களின் சொத்தாகும். சர்வதேச முதலீட்டாளர்களை திருப்திப்படுத்திட வேண்டும் என்பதற்காக, ஒன்றிய அரசாங்கம் எல்ஐசியின் பங்குகளின் மதிப்பைக் குறைத்து மதிப்பிட்டு அவர்களுக்கு விற்பதன் மூலம் அவர்கள் கொள்ளைலாபம் அடிக்க வகைசெய்துள்ளது; பாலிசிதாரர்களின் நலன்களைக் காலில்போட்டு மிதித்துக்கொண்டி ருக்கிறது. எல்ஐசிக்கு ரூ.38 லட்சம் கோடி சொத்துக் கள் உள்ளன. நாடு முழுதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிலையான ஊழியர்களுக்கும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டு முகவர்களுக்கும் எல்ஐசி வேலை அளித்துவருகிறது.
எல்ஐசியின் பங்குகளை தான்தோன்றித் தனமான முறையில் குறைத்து மதிப்பிட்டிருப்ப தற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இதன் பங்குகளை விற்பதற்கான எதிர்கால தவ ணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு மாநி லங்களிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மத வெறி வன்முறை வெறியாட்டங்கள் குறித்து அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த கவலையை யும், வேதனையையும் வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதும் இந்த மதவெறி வன்முறை வெறியாட்டங்கள், மிகவும் இழிவானமுறை யிலும் ஒரேமாதிரியும் நடைபெற்றுள்ளன. ராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற மதம் சார்ந்த நிகழ்வுகள், ஆயுதந்தாங்கிய நபர்களின் ஊர்வல த்துடனும் அவர்கள் மதவெறி வன்முறை வெறியாட்டங்களை ஏற்படுத்தும் விதத்தில் முழக்கங்கள் இட்டுக்கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய ஆயுதந்தாங்கிய நபர்கள் ஊர்வலமாகச் செல்வதற்கு முன் ஒரு குறிப்பிட்ட மதத்தின ருக்கு எதிராக வெறுப்பை உமிழும் பேச்சுக்களை நிகழ்த்தி இருக்கின்றனர். முஸ்லீம்களைப் படு கொலை செய்ய வேண்டும் என்று கொக்கரி த்துள்ளனர். இவ்வாறு கூச்சல் போட்டவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படாதது மட்டு மல்லாமல், அவர்கள் வெறுப்பை உமிழ்வத ற்கும், வன்முறையைத் தூண்டுவதற்கும் அரசுத்தரப்பே ஆதரவுடன் செயல்பட்டிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதி ராகவும், மதவெறியைப் பரப்பிடும் நடவடிக்கை களுக்கு எதிராகவும் எதுவும் கூறாமல் பிரதமர் மவுனமாக இருப்பதே, இத்தகைய ஆயுதந் தாங்கிய குண்டர் கும்பல்களுக்கு ஒன்றிய அரசின் அரவணைப்பும், ஆதரவும் உண்டு என்பது தெள்ளத்தெளிவான சாட்சியமாகும். நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் வன்முறை வெறி யாட்டங்கள் மூலம் மதவெறித் தீயை விசிறிவிட ஒன்றிய ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்கும் இழிவான சூழ்ச்சித்திட்டங்களை முறியடித்திட வும், நாட்டின் அனைத்துத்தரப்பு மக்களிடையே யும் அமைதியைப் பேணிடவும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. சிறுபான்மையினரின் உரிமைகளையும், நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணிப் பாதுகாத்திடவும் கட்சியின் அனைத்துக் கிளைகளும் சுயேச்சையாகவும் கூட்டாகவும் செயல்பட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது.
புல்டோசர் அரசியலுக்குக் கண்டனம்
முஸ்லீம் மக்களிடையே பதற்றத்தை உரு வாக்கிடவும், மதவெறித் தீயை விசிறிவிடவும் மேற்கொண்டுள்ள இழிவான உத்திகளின் ஒரு பகுதிதான் ஜஹாங்கீர்புரி மற்றும் தில்லியின் இதர பகுதிகளிலும் புல்டோசர்கொண்டு கட்டி டங்களை இடிக்கும் வேலையில் ஒன்றிய அர சாங்கம் இறங்கியிருப்பது ஆகும். பாஜக ஆட்சி யாளர்களின் இந்த புல்டோசர் அரசியல் ஏழை மற்றும் தொழிலாளர் வர்க்கக் குடும்பங்களின் இருப்பிடங்களைத் தரைமட்டமாக்கி இருக்கிறது. சட்டவிரோத கட்டுமானங்களை எப்படி இடிக்க வேண்டும் என்பதற்கும், ஆக்கிரமிப்பு களை எப்படி அகற்ற வேண்டும் என்பதற்கும் நாட்டில் அவற்றுக்கென உரிய சட்டங்களும் நடை முறைகளும் உண்டு. ஆனால் இவர்களின் புல் டோசர் அரசியல்,மேற்கண்ட சட்டங்கள் அனை த்தையும் மீறி இருக்கிறது. ஜஹாங்கீர்புரியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது நீதித் துறையின் தலையீட்டின் காரணமாக தற் போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் பல இடங்களில் இதுபோன்ற நட வடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படுவது எதுவாக இருந்தாலும் அது உரிய சட்டத்தின் படியும், அதற்குரிய நடைமுறைகளைக் கறா ராகப் பின்பற்றுவதன் மூலமும் மேற்கொள்ளப் பட வேண்டும். ஏழைகளுக்கு மாற்று இடமும், வாழ்வாதாரமும் உத்தரவாதப்படுத்தும் வரையில், இத்தகைய இடிப்புவேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.
ஜிக்னேஷ் மேவானி கைதுக்கு கண்டனம்
பிரதமரையும், பாஜக அரசாங்கத்தையும் விமர்சித்தார் என்பதற்காக சுயேச்சை குஜராத் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்ட முறையையும், அவர் பிணை யில் வந்தபின் மீண்டும் கைதுசெய்யப்பட்ட விதத் தையும் அரசியல் தலைமைக்குழு கடுமை யாகக் கண்டிக்கிறது.
பத்திரிகை சுதந்திரம் படும்பாடு
மற்றொரு மிகவும் ஆழமான நிகழ்ச்சிப் போக்கு என்பது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள 2022 உலகப் பத்திரிகை சுதந்திர அட்டவணை (World Press Freedom Index, 2022)யில், உலகில் மொத்தம் உள்ள 180 நாடுகளில் இந்தியா 150ஆவது இடத்தில் வைக்கப்பட்டிருப்பது ஆகும். சென்ற ஆண்டு இந்தியா 142ஆவது நாடாக இருந்தது, 2016இல் 133ஆவது இடத்தி லிருந்தது.
ஜம்மு-காஷ்மீர் மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகளை நிராகரித்திடுக!
ஜம்மு-காஷ்மீர் மறுவரையறை ஆணை யத்தின் பரிந்துரைகள், ஜம்மு-காஷ்மீர் மக்கள் தொகையின் குணாம்சத்தையே மாற்றியமைத்தி டக்கூடிய விதத்தில், அரசியல்ரீதியாக உள் நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டிருக் கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. சட்ட மன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப் படும் சமயங்களில் அங்குள்ள மக்கள் தொகை யைக் கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி காஷ்மீரில் 68.9 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் ஜம்முவில் 53.8 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நியாயமான முறையில் மறுவரையறை செய்யப்பட்டிருந் தால் மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதி களில் காஷ்மீருக்கு 51 இடங்களும், ஜம்மு-விற்கு 39 இடங்களும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதற்குப் பதிலாக காஷ்மீருக்கு 47 இடங்களும், ஜம்மு-வுக்கு 43 இடங்களும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
கோவிட் தொற்று மரணங்கள் குறித்த மதிப்பீடு
கோவிட் தொற்றால் இந்தியாவில் இறந்தோர் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஆழ்ந்த கவலையை அளிக்கிறது என்று அரசியல் தலைமைக்குழு தெரிவித்துக்கொள்கிறது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள மதிப்பீட்டில் இந்தியாவில் இறந்தோர் எண்ணிக்கை 47 லட்சங்களாகும். இது அரசின் சார்பில் வெளியிடப்பட்ட 4.8 லட்சம் என்பதுடன் ஒப்பிடுகையில் பத்து மடங்கு அதிகம் ஆகும். பல மாநிலங்களில் கோவிட் தொற்றால் இறந்தவர் களுக்காக இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கைகளை விட இறந்தோர் எண்ணிக்கை பல மடங்காகும். பாஜக ஆளும் குஜராத்தில், இழப்பீடு பெற்றோரைவிட பத்து மடங்குக்கும் மேல் அரசு அளித்துள்ள கணக்கின்படியே இறந்துள்ளார்கள். கோவிட் தொற்றைக் கையாண்டதில் எந்த அளவிற்கு மோசமாக மோடி அரசாங்கம் இருந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. மோடி அரசாங்கம் இறந்த வர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி யிருப்பதன் மூலம் அவர்களுக்கு இழப்பீடு அளிக் காமல் அவமானப்படுத்தி இருக்கிறது. நாட்டில் கோவிட் தொற்றால் இறந்தவர்கள் குடும்பங்கள் அனைத்திற்கும் இழப்பீடு வழங்கப்பட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மத்தியக்குழு உறுப்பினர்களுக்கு வேலைப் பகிர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்ற பின் நடை பெற்ற முதல் அரசியல் தலைமைக்குழுக் கூட்டமான இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் களுக்கும், மத்தியக்குழு உறுப்பினர்களுக்கும் வேலைப் பகிர்வு மற்றும் பொறுப்புக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது 2022 ஜூன் 18-19 தேதிகளில் நடைபெறவுள்ள மத்தியக்குழுக் கூட்டத்தில் பரிசீலனைக்காக வைக்கப்படும்.
- தமிழில்: ச.வீரமணி