states

img

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை வெற்றிபெறச் செய்வீர்!

சென்னை, பிப். 3 - ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமாருக்கு வாக்களித்து மாபெரும் வெற்றிபெறச் செய்யு மாறு வாக்காளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள் ளார்.  “ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு 5.2.2025 அன்று நடைபெறும் இடைத்தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வி.சி. சந்திரகுமார் அவர்கள்  போட்டியிடுகிறார்.  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்  மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளப் பெருமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் பெ. சண்முகம் கேட்டுக் கொண்டுள் ளார்.