states

ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி

லண்டன், ஜூன் 26- இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு, சனிக்கிழமையன்று ஆர்ஏடி பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெஸ்ட் ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் 6 நாள்கள் தனிமையில் இருந்தால், இந்திய அணியை ஜாஸ்பிரித் பும்ரா அல்லது ரிஷப் பந்த் வழிநடத்துவார்கள் என்று தெரிகிறது.