சென்னை, ஜூன் 11- நீட் தேர்வு முறைகேடு குறித்து தமிழக அரசின் சட்டத்துறை சார்பில் ஆலோ சனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;- “நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. தற்போது நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இந்தியா முழு வதும் உள்ள கல்வியாளர் கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாண வர் சமுதாயம் பொங்கி எழுந்து வருகிறது. நாடு முழுவதும் 23 லட் சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். அவர் கள் அத்தனை பேருக்கும் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற தகவல் முறையாக தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. பூசணிக்காய் சோற்றில் மறைப்பு ஆனால், நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. நீட் தேர்வு முறைகேடு தொடர் பாக பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. தமிழக அரசின் சட்டத்துறை சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத் தப்பட்டு வருகிறது.” இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.