states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆங்கில கால்வாயில் சாதனை: மாணவனுக்கு வரவேற்பு

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் இடையே அமைந்துள்ள ஆங்கில கால்வாயை நீந்தி கடக்கும் நிகழ்வில், இந்தியாவை  சேர்ந்த 6 பேர் கொண்ட குழு  பங்கேற்றது. இதில், தமிழ்  நாட்டின் தேனி மாவட்டத் தைச் சேர்ந்த 15 வயது மாண வர் சினேகன் என்பவர் இடம்  பெற்றிருந்தார். இக்குழு வினர் 72 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்துள்ள னர். இந்நிலையில், தாயகம் திரும்பிய மாணவர் சினே கன், பயிற்சியாளர் விஜய குமார் ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்  சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணையில் சனிக்கிழமையன்று காலை  18,058 கனஅடியில் இருந்த  நீர்வரத்து மாலை 13,839  கனஅடியாக குறைந்துள் ளது. மேட்டூர் அணை நீர்  மட்டம் 65.53 அடியில் இருந்து  65.59 அடியாக உயர்ந்துள் ளது. நீர் இருப்பு 29.02 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வரு கிறது. 

4,716 குடும்பங்களில் 197 குடும்பங்களுக்கு மட்டும் உதவி?

சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 வழங்க தலைமைச் செய லாளர் நரேஷ்குமாருக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நிவாரண வேலை யை முறையாக அரங்கேற்றாத காரணத்தினால்,  4,716 குடும்பங்களில் வெறும் 197 குடும்பங்கள் மட்டுமே வெள்ள நிவாரண நிதியை பெற்றுள்ளனர். இதுதொடர்பாக தில்லி அமைச்சர் அதீசி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக முதல்வர் மீது ஆபாச அவதூறு; பாஜக பெண் தொண்டர் கைது

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியில் கழிவறையில் ரகசியமாக கேமரா வைத்து மாணவிகளே சகமாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதையொட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் குடும்பத்தை ஆபாசமாக அவ மதிக்கும் வகையில் பாஜக பெண் தொண்டர் சகுந்தலா நடராஜ் ‘டுவிட்டர் எக்ஸ்’ பக்கத்தில் கருத்து  பதிவிட்டிருந்தார். அதில், “முதல்வர் சித்தராமையாவின் மனைவி அல்லது மருமகள் கழிவறை யில் இருந்த வீடியோ பதிவாகியிருந்தால் சித்தராமையா சும்மா இருப்பாரா?” என ஆபாசமாக கூறியிருந்தார். இதையடுத்து சகுந்தலா நடராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரதமருக்கு கன்னையா குமார் பதிலடி

நாட்டில் பாஜக ஆட்சியை துடைத்து எறிய எதிர்க்கட்சிகளின் கூட்டணிப் பெயரான “இந்தியா” குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புப்படுத்தி பேசினார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் கன்னையா குமார்,”’இந்தியன் முஜாகிதீன்’ மற்றும் “பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ)” போன்ற பயங்கரவாத அமைப்பு களின் பெயர்களிலும் “இந்தியா” உள்ளது என பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் கருத்தியல் படி கழுதைக்கு இரண்டு கண்கள் என்றும், பிரதமர் மோடிக்கும் இரண்டு கண்கள் என்று என்னாலும் சொல்ல முடியும்” என கூறி அதிரடி காட்டியுள்ளார். 

எஸ்.கே.மிஸ்ரா பதவி நீட்டிப்பு அமைதியின்மையை உருவாக்கும்

“அமலாக்க இயக்குநரகத்தின் (ED) தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் சில  மாநிலங்களில் அரசியல் கலவரத்தை உருவாக்குவதற்காகவே ஒன்றிய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் செய்ததை போல பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், தில்லி,  பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களிலும் அமலாக்க இயக்குநரகத்தின் நடவடிக்கை அரங்கேற வாய்ப்புள்ளது” என ராஷ்ட்ரிய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ் ஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தக்காளி விலை அதானியின் அடியாட்களுக்குப் புரியாது

“தக்காளி விலை உயர்வு பணவீக்கத்தின் சுமை. ஏழைகளின் ஈரமான கண்களை அதானி யின் அடியாட்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்? விலை உயர்வால் தக்காளியை யாரும்  வாங்கவில்லை என்பது சோகமான விஷயம்” என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் விமர்சித்துள்ளார்.

பொருளாதார தரவரிசையை விட பெண்களுக்கு மரியாதை முக்கியம்

“பொருளாதார தரவரிசையை விட பெண்களின் கவுரவம் முக்கியமானது. நாட்டின் பொருளாதாரம் உயர் நிலையை அடையலாம் அல்லது அடையாமல் போகலாம்.  ஆனால் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கவுரவத்தை காப்பாற்றுவது முன்னுரிமையாக இருக்க வேண்டும். மணிப்பூரில் நடந்த வன்முறைக்குப் பின்னால் பாஜகவின் வாக்கு வங்கி அரசி யல் உள்ளது” என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.

திரிணாமுல் பஞ்சாயத்து உறுப்பினர் சுட்டுக் கொலை

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸில் புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினர் மைமூர் கராமி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்டபின்பும்  மைமூரின் மரணத்தை உறுதி செய்வதற்காக கூரிய பொருளால் குத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் வாய்க்கால் வெட்டும் பணி

வளையமாதேவி பகுதியில் கரிவெட்டி கிராமம் செல்லும் பாதை அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. பின்னர், 10க்கும் மேற்பட்ட ராட்சத  கனரக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சாலைக்கு கிழக்கு பகுதியில் உள்ள நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணிகளை என்எல்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதை யொட்டி 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக துப்பாக்கி சுடுதல் தமிழ்நாடு வீராங்கனைக்கு தங்கம்

சிச்சுவான், ஜூலை 29- சர்வதேச பல்கலைக் கழக விளையாட்டு கூட்ட மைப்பு சார்பில் உலக அளவி லான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் சீனாவின் சிச்சு வான் மாகாணத்தில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் சனியன்று நடை பெற்ற மகளிருக்கான 10  மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில்  இந்தியா சார்பில் களமிறங்  கிய இளவேனில் வாலறி வன் 252.5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து  தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். உலக அள விலான துப்பாக்கி சுடுதல் பிரி வில் தங்கப்பதக்கம் வென்ற  மூன்றாவது இந்திய வீராங் கனை என்ற பெருமையை  பெற்றுள்ளார் இளவேனில் வாலறிவன். இதற்கு முன் அஞ்சலி பகவத், அபூர்வி சந்தேலா தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.  இளவேனில் வாலறி வன் தமிழ்நாட்டின் கட லூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிவிபத்து: நிவாரணம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 29- கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை காலை  பயங்கர சத்தத்துடன் பட்டாசு  குடோன் வெடித்தது. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்நிலையில் பட்டாசு  வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும்  காயம் அடைந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை யில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார். உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தமிழக மீனவர்களை மீட்ட  கடற்படை கப்பல்

சென்னை,ஜூலை 29- தமிழ்நாட்டின் கடற்கரையிலிருந்து சுமார் 130 கடல் மைல் தொலைவில், மோசமான வானிலை காரணமாக மூன்று இந்திய மீன்பிடிக் கப்பல்கள் தத்தளிப்பதை இந்தியக் கடற்படைக் கப்பல் கஞ்சர் கண்டறிந்து அவர்களை படகுடன் மீட்டது.  எரிபொருள் தட்டுப்பாடு, இன்ஜின் பழுது மற்றும்  கடல் சீற்றம் காரண மாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சபரிநாதன், கலைவாணி, வி சாமி ஆகி யோருக்கு சொந்தமான மீன்பிடிக் கப்பல்கள், இரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்தன. இந்த கப்பல்களை மீட்ட கஞ்சர் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு 36  மீனவர்களை பாதுகாப்பாகத் திரும்பு வதற்கு உதவியது.

லாரி மீது ஆம்னி பேருந்து மோதி தீ விபத்து

அம்பத்தூர், ஜூலை 29- கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று 22 பயணி களுடன் சனிக்கிழமை காலை 6 மணிக்கு கோயம்பேடு நோக்கி வந்து  கொண்டிருந்தது.  பூந்தமல்லி நெடுஞ் சாலை, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே வந்து  கொண்டிருக்கும் போது, மதுரவாய லில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் பேருந்து மோதியது. இதில் பேருந்தின் முன் பகுதி கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுந்தது. லாரியின் பின்பகுதியும் உடைந்து சேதமடைந்தது.  அப்போது பேருந்தின் முன் பகுதி  தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.  இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்துக்குள் இருந்து அலறிகொண்டே வெளியே குதித்து உயிர் தப்பினர்.  இதுகுறித்து தகவல் அறிந்து மதுரவாயல், கோயம்பேடு, பூந்த மல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் ஆம்னி பேருந்து  முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. லாரியின் பின்பகுதியில் இருந்த டயர்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

உலகச் செய்திகள்

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகரிதுள்ளது. வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 19 லட்சத்து 6 ஆயிரத்தைத் தொட்டு விட்டதாக அந்நாட்டின் புள்ளிவிபர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. சுற்றுலா மற்றும் சேவைத்துறையில் புதிதாக 6 லட்சத்து 10 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதுதான் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

நடப்பாண்டில் இரண்டாவது காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் 2.4 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் வர்த்தகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரி விக்கிறது. கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டை விட தற்போது கூடுதல் அதிகரிப்பு அமெரிக்கப் பொருளாதாரத்தில் இருந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மிகப்பெரிய உருவமுள்ள விலங்கொன்றின் தொடை எலும்பை உகாண்டாவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ள விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். குறைந்தது 19 அல்லது 20 மில் லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த விலங்கு வாழ்ந்திருக்கும் என்று கணக்கிட்டுள்ளார்கள். நீர்வாழ் உயிரினமாக அது வாழ்ந்திருக்க வேண்டும் என்றும், அதேநேரத்தில் மற்ற நீர்வாழ் உயிரினங்களை விட பெரிதாக இருந்திருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.