சென்னை,அக்.23- மாதர் சங்கப் போராட்டத்தில் அராஜகமாக நடந்துகொண்ட திருவைகுண்டம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருவைகுண்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் அராஜகமாக நடந்து கொண்ட திரு வைகுண்டம் காவல் ஆய்வாளர் பத்மநாப பிள்ளையை வன்மை யாகக் கண்டிக்கிறோம். கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், ரேசன் கடைகளில் மாநி லங்களுக்கு வழங்க வேண்டிய உணவு தானியங்களை முறையாக வழங்கக்கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசாங்கம் ரேசன் கடைகளில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யை முன்வைத்து இயக்கங்கள் நடைபெற்று வருகிறது. திருவைகுண்டத்தில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி. பூமயில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் பொது மக்களுக்கு இடையூறு இன்றி நடந்து கொண்டிருந்தது.அப்போது, அங்கு வந்த ஆய்வாளர் பத்மநாப பிள்ளை போராட்டத்தை சீர்குலைக் கும் நோக்கத்துடன், நூதன முறை யில் நடைபெற்ற போராட்டத்தில், பயன்படுத்தப்பட்ட பொருட்களை, அப்புறப்படுத்தி போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை மிரட் டும் விதமாக நடந்து கொண்டுள்ளார். போராட்டத்தில் அராஜகத்தோடு நடந்து கொண்ட திருவைகுண்டம் காவல்துறை ஆய்வாளர் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.