தஞ்சாவூர், அக்.7- காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி டெல்டா மாவட்டங்களில் அக் டோபர் 11 அன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டியக்கத்தைச் சேர்ந்த- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ. சண்முகம், தமிழ் மாநில விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பெரியசாமி, திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகி யோர் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அந்தப் பேட்டியில் அவர்கள் கூறி யதாவது:
காய்ந்து கருகிய 2 லட்சம் ஏக்கர்
“நிகழாண்டு குறுவை சாகுபடிக் காக ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் நிகழாண்டும் செயல்படுத்தப்பட்ட தால் வழக்கத்தை விட கூடுதல் பரப்ப ளவில் குறுவை சாகுபடி நடைபெற் றது. எனினும், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கர் நாடக அரசு காவிரியில் திறந்து விடா ததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகி விட்டன.
போராட்டத்தைத் தூண்டிவிட்ட பாஜக
கர்நாடக அணைகளில் தற்போ தும் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில் தமிழ கத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின. இதனால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. எனவே, எஞ்சிய குறுவை பயி ரைப் பாதுகாப்பதற்கும், சம்பா சாகு படி பணிகளைத் தொடங்கிடவும் தமிழ் நாட்டுக்கு கர்நாடக அரசு காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, திருச்சிராப் பள்ளி, புதுக்கோட்டை, கடலூர், அரிய லூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோ பர் 11 ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்
எனவே, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என வலி யுறுத்தியும், காவிரி ஆணையம் இதற் கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கர்நாடகத்தில் போராட்டத்தைத் தூண்டி- நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்பு களைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு பல முறை வலியுறுத்திய பின்பும் பாரா முகமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக் கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு கூட்டியக்கத் தலை வர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லப் பொதுச்செயலாளர்கள் சாமி. நட ராஜன், பி.எஸ். மாசிலாமணி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், விவசாய சங்கங்க ளின் கூட்டியக்கத் தலைவர் பி.கே. தெய்வசிகாமணி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், கூட்டியக்க நிர் வாகிகள் என்.வி. கண்ணன், பி. செந்தில்குமார், சோ. பாஸ்கர், ஆர். ராமச்சந்திரன், காளியப்பன், சு. பழனி ராஜன், அருணாசலம், விடுதலைச் சிறுத்தைகள் விவசாயிகள் பாது காப்பு சங்கம் மாநிலச் செயலாளர் பசுமை வளவன், சிபிஐ மாவட்டச் செய லாளர் முத்து.உத்திராபதி, காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.வி. இளங்கீரன், விவசா யத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். வாசு, கரும்பு விவ சாயிகள் சங்க நிர்வாகி ராமசாமி, திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பா ளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கூட் டத்தில் கலந்து கொண்டனர்.