அதிகனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் பல்வேறு பகுதிகளில் நிவாரண உதவிகளையும் வழங்கினர்.
- பாளையங்கோட்டை ம.பி.நகர் பகுதியில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயலாளர் க.ஶ்ரீராம் உள்ளிட்டோர் தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
- மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் - ஓய்வுபெற்றோர் சங்கம் சார்பில் அதன் தலைவர்கள் ராமநாராயணன், கோபால் ராஜ், பாண்டியராஜன், முத்துக்குமரன், சிராஜுதின், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இணைந்து பாளையங்கோட்டை அண்ணாநகர், இந்திராநகர் பகுதியில் நிவாரண உதவிகளை வழங்கினர்.
- குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
- சேரன்மகாதேவி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், ஒன்றிய செயலாளர் பாலு மற்றும் ரவி