states

தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் மோசம் : ஒப்புக்கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி

சென்னை, ஜன. 18- தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் மோசம் என்று ஒப்புக்கொண்ட ஒன்றிய சாலைப் போக்குவரத்து-நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.  தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சேதமடைந்த சாலைகளை அமைத்து விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் மீது  இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஒன்றிய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக நிதின் கட்கரி இருப்பதால் அதற்கான தார்மீக பொறுப்பு ஏற்று அவர் பதவி விலக வேண்டும் என்று சிஐடியு அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சம்மேளன பொதுச் செயலாளர் லட்சுமய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த சாலை அமைத்தவர்களை ஜாமீனில் விடமுடியாது என்றும், ஒப்பந்த தாரர்கள் மற்றும் பொறியாளர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சாலைப் போக்குவரத்து- நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,  கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளி யாகியுள்ளன. 16.1.2025 அன்று தில்லியில் சிஐஐ ஏற்பாடு செய்த சாலைப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடக்கிவைக்கும் போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். விசாரணைக்கு உத்தரவிடுக!  குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே இலாகாவை வைத்திருந்தா லும், உண்மையை உணர்ந்ததற்காக அமைச்சருக்கு சம்மேளனம் நன்றி தெரி விக்கிறது. தவறு செய்த ஒப்பந்ததாரர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்திருந்தால், யாரும் எதிர்த்திருக்க மாட்டார்கள். மாறாக அரசை பாராட்டி யிருப்பார்கள். ஆனால் அதை ஏன் இதுவரை  ஒன்றிய அரசு  செய்யவில்லை? இப்போதும்  அமைச்சர் தனது கருத்துகளில் உறுதியுட னும், நேர்மையுடனும் இருந்தால், விபத்துகளையும், பலரின் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் தேசிய நெடுஞ்சாலைகளின் தவறான கட்டுமானம் குறித்து நடுநிலையான,

சுதந்திரமான, நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சாலை கட்டுமானத்தில் நிகழும் தவறுகள், தரமின்மை குறித்து அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளம் பலமுறை அரசுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விதிமுறைகளை மீறுதல் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் தவறான சாலை கட்டுமானம் குறித்து அமைச்சர் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு   புகார் அளித்துள்ளது. இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. மக்களின் உயிரைக் காப்பாற்ற  உண்மையாக செயல்படுக! ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் “சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  வாரத்தை  பெயருக்கு நடத்துகிறது. சாலைப் பாதுகாப்புத் திட்டங்களில் பங்குதாரர்களின் கூட்டங்களுக்கு அரசு அழைப்பு விடுத்தபோது, சிஐடியு சம்மேளனம் அத்தகைய கூட்டங்களில் பங்கேற்று, இந்தப்  பிரச்சனைகள் அனைத்தையும் அதிகாரி களின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. அதன் பிறகும் அரசு  முறையாக கருத்து கேட்டு முடிவு செய்யவில்லை. இனி மேலாவது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான  அமைச்சர்  மக்களின் உயிரைக் காப்பாற்ற உண்மை யான மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.