states

ஓய்வூதியர்கள் ஒன்றுபட வேண்டும் சிஐடியு வேண்டுகோள்! - கே.ஆறுமுக நயினார்

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங் களில் பணி ஓய்வு பெற்ற சுமார் 93,000 ஓய்வூதியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது.  அகவிலைப்படி என்பது தனித்தொகை அல்ல.  உயரும் விலைவாசியை ஈடுகட்ட வழங்கப் படுவதுதான் அகவிலைப்படியையும் இணைத்து ஓய்வூதியம் வழங்கும்போதுதான் முழுமையான ஓய்வூதியம் வழங்கியதாக கருதப்படும்.  அகவிலைப்படி உயர்வு வழங்காத நிலையில், வழங்க வேண்டிய ஓய்வூதியத்தைக் குறைத்து வழங்குவதாகத்தான் அர்த்தம்.  ஆனால், கடந்த  8 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கு அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள் ளது.  அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டு மென தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.   மறுபுறத்தில், அகவிலைப்படி உயர்வை வழங்க நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.  ஆனால், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஊழியர்களின் நியாய மான கோரிக்கையை மறுத்து வருவதுடன், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடுகளுக்குச் சென்று அகவிலைப்படி உயர்வு கொடுக்க மறுத்து வருகிறது. 

அண்ணா தொழிற்சங்கத்தின் திசை திருப்பல்

இந்தச் சூழ்நிலையில், 17.12.2024ஆம் தேதி யன்று போக்குவரத்து ஓய்வூதிய சங்கங்களில் ஒன்றான நல மீட்புக்குழுவின் சார்பாக சென்னை யில் போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்தை ஆதரிப்பதாக அண்ணா தொழிற்சங்கம் அறிக்கை வெளியிட்டதோடு, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் நேரில் பங்கேற்று போராட்டத்தை ஆதரித்தும் பேசியுள்ளார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் தனது அறிக்கையிலும், போராட்ட கூட்டத்தில் பேசிய போதும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சித்துள்ளார்.  அப்பட்டமாக பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார்.  அதிமுக ஆட்சி யின் போது அகவிலைப்படி உயர்வை தருவதாக அன்றைய போக்குவரத்து அமைச்சர் கூறியதாக வும், முழு தொகையையும் தந்தால்தான் பெறு வோம், இல்லாவிட்டால் வழக்கு போட்டு வாங்கிக் கொள்வோம் என சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூறியதாகவும் குறிப்பிட்டுள் ளார். கமலக்கண்ணன் அவர்களுக்கு இதைப் பற்றிய குறைந்தபட்ச விவரம்கூட தெரியவில்லை என்பது அவரது அறிக்கையைப் பார்த்தாலும், பேச்சைக் கேட்டாலும் தெரிய வரும்.

அதிமுக ஆட்சியில் நடந்தது என்ன?

கடந்த 1.1.2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியின்போதுதான்.  அதற்கு பின்பு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து போராடினோம்.  அரசு எந்தவித பேச்சுவார்த்தையையும் நடத்த வில்லை.  2017ஆம் ஆண்டு தான் பேச்சு வார்த்தையே துவங்கியது.  அப்போது நடை பெற்ற பேச்சுவார்த்தையில் அரசு கோரிக்கை களை ஏற்றுக்கொள்ளாததால் 2017 மே மாதம் வேலை நிறுத்தம் நடைபெற்றது.  வேலை நிறுத்தத்தை யொட்டி 3 அமைச்சர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தையின்போது அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான உறுதி கொடுக்கப்பட்டது.  அதில் 2017 செப்டம்பருக்குள் ஓய்வூதியர்களின் நிலுவையை முழுமையாக வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.  பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடத்துவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.  அதற்கு பின்பு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  பேச்சுவார்த்தையில் அண்ணா  தொழிற்சங்கமும் பங்கேற்றது.  எந்த பேச்சு வார்த்தையிலும் இதைப்பற்றி பேசவில்லை.  அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் பேசவில்லை.  கமலக்கண்ணன் அவர்கள் எந்த தேதியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இதுபற்றி பேசினார்கள் என்பதை கூற  முடியுமா?  நிச்சயமாக கூற முடியாது.  ஏனென் றால், அப்படிப்பட்ட பேச்சுவார்த்தையே நடைபெற வில்லை.

துரோகம் செய்த  அண்ணா தொழிற்சங்கம்

2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஊதிய பேச்சுவார்த்தையில் பெரும்பகுதியான தொழி லாளர்களின் விருப்பத்திற்குப் புறம்பாக அதிமுக ஆட்சியில் அண்ணா தொழிற்சங்கம் துணையுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சித்தனர்.  இதைக் கண்டித்து, 4.1.2018 முதல் வேலை நிறுத்தம் தொடங்கியது.  வேலை நிறுத்தம் நடைபெறும்போதே அண்ணா தொழிற்சங்கம் ஒப்பந்தம் போட்டது.  பின்பு நீதிமன்றம் வேலை நிறுத்தத்தை தடை செய்தது.  அதையும் மீறி வேலை நிறுத்தம் நடை பெற்ற நிலையில், ஒரு நபர் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  மற்ற துறை ஊழியர் களுக்கு 2.57 உயர்வு கொடுத்தபோது, போக்கு வரத்து ஊழியர்களுக்கு 2.44 உயர்வு கொடுத்தது தவறு என ஒரு நபர் குழுவின் முன்பு வாதிட்டோம்.  அதிமுக அரசு கொடுத்த சம்பளமே அதிகமானது என வழக்கறிஞரை வைத்து வாதாடினர்.  இவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பேசுவது விந்தையாக உள்ளது. மேலும், 5 சதவீத அகவிலைப்படி வழங்க ஆரம்பித்ததே 2018 ஜனவரிக்கு பின்புதான்.  அதற்கு பிறகு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.  எந்த பேச்சுவார்த்தையும் நடை பெறாத நிலையில், அமைச்சர் தருவதாக கூறினார் என அப்பட்டமாக பொய் கூறியுள்ளார்.  மேலும், அதிமுக அரசு தான் 2019ஆம் ஆண்டு அரசாணை 142ஐ பிறப்பித்து அகவிலைப்படி உயர்வை நிரந்தரமாக நிறுத்தியது.   போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர்களின் அக விலைப்படி உயர்வை மறுத்து அநீதி இழைத்தது அதிமுக அரசு.  அதிமுக அரசின் வஞ்சனையை அப்படியே திமுக அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது என்பதுதான் பிரச்சனை.  இரண்டு அரசு களும் ஓய்வுபெற்ற ஊழியர்களை வஞ்சித்துள்ளன.  தவறான தகவல்களைக்கூறி அதிமுக அரசின் வஞ்சனையை அண்ணா தொழிற்சங்கம் நியாயப்படுத்த வேண்டாம்.  இதுபோன்ற பிரச்சனை களுக்காக ஒன்றாக இணைந்து போராடலாம் என அனைத்து தொழிற்சங்கங்களும் விடுத்த அழைப்பை கூட அண்ணா தொழிற்சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. தொழிலாளர்கள் உண்மைகளைப் புரிந்து கொண்டு ஆளும் அரசுகளால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட அனைத்து  தொழிலாளர்களும், ஓய்வூதியர்களும் முன்வர வேண்டுமென சிஐடியு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.