சாதிய மேலாதிக்க வெறி யோடு நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்ன துரை மற்றும் அவரது தங்கை மீது நடத் தப்பட்டுள்ள கொலைவெறித் தாக்கு தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. சாதி ரீதியிலான பாகுபாடுகளும், ஒடுக்குமுறையும் தமிழ்நாட்டில் புரை யோடியிருக்கிறது. இது பள்ளி மாண வர்கள் மத்தியில் பரவி வருவது மிகுந்த கவலைக்குரிய விசயமாகும். பள்ளி, கல் லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக வன்முறைகளை தவிர்ப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்து வதற்கும் வழிமுறைகளை உருவாக்கு வதற்கு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவினை அமைத்து தமிழ்நாடு முத லமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கது. கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட வர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மூலம் கடும் தண்டனை பெற்றுத் தர அரசு முயற்சி எடுக்க வேண்டும். தாக்குதலுக் கான சின்னத்துரை மற்றும் அவரது தங்கைக்கு உயர் தர சிகிச்சையளிக்க அரசு முன்வர வேண்டும். அத்துடன் அக் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கு வதுடன், இரண்டு குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதிக் கலவரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையங்கள் கொடுத்த பல்வேறு பரிந்துரைகள் இது வரை அமலாக்கப்படவில்லை. அவற்றை அமல்படுத்த ஆக்கப்பூர்வமான முயற்சி களை அரசு மேற்கொள்ள வேண்டும் மேலும், பள்ளிகளில் இதுபோன்று நிலவும் சாதிய பாகுபாடுகள், தீண்டா மைக் கொடுமைகள், அதன் வடிவங் களை அறவே ஒழிப்பதற்கு உரிய நட வடிக்கைகள் மேற்கொள்வதோடு, தேவையான விழிப்புணர்வுகளையும் ஏற் படுத்த வேண்டும். சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்