states

img

இந்திய அளவில் முதலிடம் பெற்ற தமிழக தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு!

சென்னை,அக்.24- முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.  தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் ரூ.2877.43 கோடி செலவில் டாடா டெக்னா லஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டது. தொழிற்பயிற்சி நிலையங் களுக்கான அகில இந்திய தொழிற்தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங் களுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. 2023-2024 ஆம் கல்வியாண்டு தேர்வு 12.08.2024 முதல் 9.09.2024 வரை நடை பெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 26,236 அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள், 19,097 தனியார் தொழிற்பயிற்சி மாணவர்கள் என மொத்தம் 45,333 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே தொழிற் பிரிவில் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாண வன் என்.அந்தோணி சேசுராஜ் மற்றும் திருச்சி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி என். மோகன பிரியா ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். தொழிற் பிரிவில் சிதம்பரம் அரசி னர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி யு. பிரசிதா மற்றும் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாண வர் எஸ். மணிமுருகன் ஆகியோர் அகில இந்திய அளவில் முத லிடத்தை பெற்றுள்ளனர். தொழிற் பிரிவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம் புத்தூர் கே. இந்துஸ்ரீ அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் நவீன கால தொழிற்பிரிவுகள் உட்பட்ட பல்வேறு தொழிற் பிரிவு களிலும் தமிழ்நாட்டை சேர்ந்த 19  அரசு தொழிற் பயிற்சிநிலைய மாணவர்கள் மற்றும் 5 தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் கள் என மொத்தம் தமிழ்நாட்டை சேர்ந்த 29 மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர். பயிற்றுநர்களுக்கான பயிற்சி யில் பயிற்சி பெற்ற காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுநர் வி. ஸ்வேதா, தொழிற் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவ்வாறு, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் பயிற்றுநரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அக்டோபர் 24 வியாழக் கிழமையன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்ச்சியில், தமிழக தொழி லாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணே சன், தலைமைச் செயலாளர் நா.  முருகானந்தம், துறை செயலாளர் கொ. வீரராகவ ராவ், வேலை வாய்ப்பு - பயிற்சித்துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.