states

கொடநாடு வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்

சென்னை, ஜூலை 28 - கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த  2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிர வில் நுழைந்த மர்ம நபர்கள் காவ லாளி ஓம் பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் இருந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொலை, கொள்ளை  சம்பவங்கள் தொடர்பாக சோலூர் மட்டம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான், கனக ராஜ் ஆகியோரைக் காவல்துறை யினர் சந்தேகித்த நிலையில், கார் விபத்து ஒன்றில் கனகராஜ் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவ ரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கொடநாடு கொலை கொள்ளை வழக்குகளுடன் தொடர்புடைய சாட்சியங்களைக் கலைத்து, ஆதாரங்களை அழித்ததாக கடந்த  ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர்

இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் ஜாமீன் வழங் கிய நீலகிரி மாவட்ட அமர்வு நீதி மன்றம், இருவரும் ஊட்டியி லேயே தங்கியிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது. இந்நிலையில் ஊட்டியில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி தனபால், ரமேஷ் ஆகி யோர் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்திருந்த னர். அதில் ஊட்டியில் தங்குவ தால் தங்கள் உயிருக்கு ஆபத்து  இருப்பதாக மனுவில் தெரிவித் திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுதாரர்கள் இருவரும் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15ஆம் தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சோலூர்மட்டம் காவல் நிலை யத்தில் கையெழுத்திட வேண்டும்  என நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டார். மேலும், நீலகிரி நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல், இருவரையும் காவ லில் வைத்து விசாரிக்கக் கூடாது  என காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.